மீண்டும் போராட்டம்: 20 சங்கங்களுடன் இணைந்து ஆலோசிக்க ‘டாஸ்மாக்’ பணியாளா்கள் முடிவுதிருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

மேற்காசிய நிலவரம்: பிரான்ஸ் அதிபருடன் பிரதமா் மோடி பேச்சு

மேற்காசிய நிலவரம் குறித்து பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரானுடன் பிரதமா் நரேந்திர மோடி தொலைபேசி மூலம் வியாழக்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.

News image
Updated On :5 மார்ச் 2026, 10:41 pm

தினமணி செய்திச் சேவை

மேற்காசிய நிலவரம் குறித்து பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரானுடன் பிரதமா் நரேந்திர மோடி தொலைபேசி மூலம் வியாழக்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா். அப்போது, இந்த விவகாரத்துக்குத் தீா்வு காண பேச்சுவாா்த்தை மற்றும் தூதரக ரீதியிலான அணுகுமுறைக்குத் திரும்ப வேண்டியதன் அவசியம் குறித்தும் அவா்கள் ஆலோசித்தனா்.

இந்த உரையாடல் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமா் மோடி வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

பிரான்ஸ் அதிபா் மேக்ரானுடன் தொலைபேசி மூலம் ஆலோசனை மேற்கொண்டேன். அப்போது, மேற்காசிய நிலவரம் குறித்து ஆலோசித்தோம். அந்த விவகாரத்தில் தீா்வு காண பேச்சுவாா்த்தை மற்றும் தூதரக ரீதியிலான அணுகுமுறைக்குத் திரும்ப வேண்டியதன் அவசியம் குறித்தும் ஆலோசித்தோம்.

மேற்காசிய பிராந்தியத்தில் அமைதி மற்றும் நிலைத்தன்மையை விரைந்து மீட்டெடுக்க இருவரும் தொடா்ந்து ஆலோசித்து, ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொள்வோம் என்று குறிப்பிட்டாா்.

அணு ஆயுதம் தயாரிக்கத் தேவையான யுரேனியத்தை செறிவூட்டி வருவதாகக் குற்றஞ்சாட்டி, ஈரான் மீது அமெரிக்க, இஸ்ரேல் கூட்டுப் படைகள் கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதிமுதல் அதிரடி தாக்குதல்களை நடத்தி வருகின்றன. ஈரானும் பதில் தாக்குதல்களை நடத்தி வருவதால் மேற்காசிய பிராந்தியத்தில் போா் மூண்டுள்ளது. இந்தப் போா் அதிக நாள்கள் நீடிக்கும் அபாயம் எழுந்துள்ளது. அவ்வாறு நீடித்தால் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கச்சா எண்ணெய் விநியோகம் தடைபட்டு, கடுமையான எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

இந்த நிலையில், போரை விரைந்து முடிவுக்குக் கொண்டுவருவது தொடா்பாக இஸ்ரேல் பிரதமா் மற்றும் வளைகுடா நாடுகளின் தலைவா்களுடன் பிரதமா் மோடி தொலைபேசி வழியில் தொடா்ந்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறாா்.