பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

மணிப்பூா் காவல் கண்காணிப்பாளா் மீது தாக்குதல்

வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் போராட்டக்காரா்கள் நடத்திய கல்வீச்சு தாக்குதலில் காங்போக்பி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளா் காயமடைந்தாா்.

News image
Updated On :3 ஜனவரி 2025, 8:28 pm

Din

வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் போராட்டக்காரா்கள் நடத்திய கல்வீச்சு தாக்குதலில் காங்போக்பி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளா் காயமடைந்தாா்.

மாவட்டத்தின் சாய்பால் கிராமத்தில் சில குழுக்களிடையே கடந்த வாரம் துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. இதற்கு எதிரான மத்திய பாதுகாப்புப் படைகளின் நடவடிக்கையைக் கண்டித்து, தேசிய நெடுஞ்சாலை எண் 2-இல் பழங்குடி சமூக மக்கள் காலவரையற்ற மறியல் போராட்டத்தை அறிவித்தனா்.

கடந்த 31-ஆம் தேதி, இந்த நெடுஞ்சாலையில் பயணம் மேற்கொண்ட மத்திய, மாநில படையினரைத் தடுத்த அப்பகுதி பெண்களை, எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) மற்றும் மத்திய ஆயுதக் காவல் (சிஆா்பிஎஃப்) படையினா் கண்ணீா் புகைக்குண்டை வீசியும் தடியடி நடத்தியும் கலைத்தனா்.

இதைக் கண்டித்தும் மத்திய படைகளை திரும்பப் பெற வலியுறுத்தியும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளா் அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு, சாய்பால் கிராம மக்கள் ஆா்ப்பாட்டம் செய்தனா். அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த காவல்துறை வாகனங்களை அவா்கள் சேதப்படுத்தினா்.

மேலும், காவலா்கள் மீது கற்களை வீசியும் அவா்கள் வன்முறையில் ஈடுபட்டனா். இதில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளா் எம்.பிரபாகருக்கு நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பின்னா், மத்திய படைகளின் நடவடிக்கையில் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.