எங்களை துரத்துவதை நிறுத்துங்கள்! மோடியை விமர்சித்த சிறுமியின் தாய் ஆத்திரம்பைக்-டாக்ஸி ஓட்டினால் அபராதம்: நீதிமன்றத்தில் தமிழக அரசுசென்னையின் அண்டை மாவட்டங்களை சுற்றிவளைத்த மழை!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

அஸ்ஸாம் காவல்துறை மீது பயங்கரவாதிகள் தாக்குதல்: மக்கள் பாதுகாப்பு பற்றி காங்கிரஸ் கேள்வி!

காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜிதேந்திர சிங் பேசியது தொடர்பாக...

News image

காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜிதேந்திர சிங் உடன் அஸ்ஸாம் மாநில காங்கிரஸ் தலைவர் கௌரவ் கோகல் - கோப்புப் படம்

Updated On :23 மார்ச் 2026, 6:14 pm IST

அஸ்ஸாம் காவல்துறை கமாண்டோ முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியது பற்றி காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

அஸ்ஸாம் மாநிலத்தின் தின்சுகியா மாவட்டத்தில் நேற்று (மார்ச் 22) மாநில காவல்துறை கமாண்டோ முகாம் பயங்கரவாத அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்.

இந்தத் தாக்குதலில் காவல்துறை அதிகாரிகள் 4 பேர் படுகாயமடைந்தனர். தடை செய்யப்பட்ட உல்ஃபா (ஐ) பயங்கரவாத அமைப்பு இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பேற்றது.

இந்தத் தாக்குதலை நடத்தியவர்களைப் பிடிக்க தேடுதல் வேட்டை நடைபெறுவதாக அஸ்ஸாம் முதல்வர் ஹிமாந்த விஸ்வ சர்மா தெரிவித்தார்.

இந்த நிலையில், பயங்கரவாதத் தாக்குதல் மாநிலத்தின் சட்ட - ஒழுங்கின் மீது கேள்வி எழுப்யுள்ளதாகக் குறிப்பிட்டுப் பேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜிதேந்திர சிங், “இரு ஆண்டுகளுக்கும் முன்பு ஆகஸ்ட் 15 அன்று 22 வெடிகுண்டுகள் அஸ்ஸாமில் கண்டெடுக்கப்பட்டது. ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. முதல்வர் உறுதியாக நடவடிக்கை எடுப்பதாகக் கூறியிருந்தார். அப்படி ஏதேனும் நடவடிக்கை எடுத்திருந்தால் இப்போது மீண்டும் தாக்குதல் நடைபெற்றிருக்காது.

இப்போது மாநிலத்தின் உள் பாதுகாப்புப் பற்றி பெரிய கேள்வி எழுந்துள்ளது. உங்கள் சொந்த மாநிலத்தைப் பாதுகாக்க முடியாமல், பயங்கரவாதிகளை எதிர்த்துப் போராடாமல், எந்த முகத்தை வைத்துக்கொண்டு தேர்தலில் நின்று மக்களிடம் வாக்கு கேட்க முடிவு செய்துள்ளீர்கள்?

தற்போது உள்ள பெரிய ஆபத்து, மோசமான பாதுகாப்பு தான். நமது சொந்த மாநிலத்தைப் பாதுகாப்பதில் இந்த அரசு தோல்வியடைந்துள்ளது” என்று தெரிவித்தார்.

மேலும், ஐந்து ஆண்டுகளில் உங்களுடைய செயல்பாடுகள் பற்றி மக்கள் கேள்வி எழுப்புவார்கள் என்றும் மதப் பிளவுவாதம் பேசுவது உதவாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

Summary

Attack on police camp raises questions on Assam's internal security: Congress

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.