சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த இந்திய விமானப் படை அதிகாரி கைது!

இந்திய விமானப் படை அதிகாரி கைது செய்யப்பட்டது பற்றி...

News image

கைது

கோப்புப் படம்

Updated On :23 மார்ச் 2026, 11:19 am

இணையதளச் செய்திப் பிரிவு

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த இந்திய விமானப் படை அதிகாரி கைது.

அஸ்ஸாமில் பணியாற்றிய இந்திய விமானப் படை அதிகாரி ஒருவர் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாகவும் முக்கியத் தகவல்களைப் பகிர்ந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

ராஜஸ்தான் புலனாய்வுத் துறை மற்றும் விமானப் படை புலனாய்வுத் துறை இணைந்து நடத்திய நடவடிக்கையில் குறிப்பிட்ட நபர் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ராஜஸ்தான் மாநிலத்தில் சந்தேகத்திற்குரிய நபர் ஒருவர் கடந்த ஜனவரியில் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையின் மூலம் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக திப்ருகர் பகுதியில் உள்ள விமானப் படையில் பல்நோக்கு அலுவலராகப் பணிபுரிந்த சுமித் குமார் (36) கைது செய்யப்பட்டார். இவர் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்.

விசாரணையில், பாகிஸ்தான் உளவுத் துறையுடன் கடந்த 2023 முதல் சுமித் குமார் தொடர்பில் இருந்ததாகவும், பணத்திற்காக ரகசியத் தகவல்கள் பலவற்றைப் பகிர்ந்ததாகவும் தெரிய வந்துள்ளது.

மேலும், போர் விமானங்களின் இருப்பிடம், ஏவுகணை அமைப்புகள், பணியாளர்கள் பற்றிய விவரங்கள் போன்ற விமானப் படையின் பல ரகசியத் தகவல்களைச் சேகரித்து சமூக வலைதளங்கள் மூலம் பாகிஸ்தான் உளவு அமைப்புகளுக்கு அனுப்பியது கண்டறியப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட நபர் ஜெய்ப்பூரில் உள்ள மத்திய விசாரணை மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு, புலனாய்வு அமைப்புகளின் பல பிரிவுகள் அந்த நபரை விசாரிக்கவுள்ளனர்.

இதுதொடர்பாக, அதிகாரப்பூர்வ ரகசியங்கள் சட்டம் 1923 மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா-ன் சம்பந்தபட்டப் பிரிவுகளின் கீழ் அந்த நபரின் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. விசாரணையின் மூலம் இந்த வலையில் வேலை பார்க்கும் உளவாளிகள் பற்றிய தகவல்கள் வெளிவரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.