தேர்தல் தடைநீக்கக் கோரி சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் மனுகாவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் திமுக அவசர மனு இரு முதல்வர்களும் சுமூகமாகப் பேசி தீர்க்க வேண்டும்: பிரேமலதாகபினி அணையில் இருந்து 10,000 கனஅடி நீர் திறப்பு நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை அபார வளர்ச்சி கண்டுள்ளது: பிரதமர் மோடிஜூலையில் 1.06 கோடி பேர் சென்னை மெட்ரோவில் பயணம்! 20% கட்டணத் தள்ளுபடி பற்றி தெரியுமா?தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு! குவைத் மீது தொடரும் ஈரானின் தாக்குதல்! அரசுக் கட்டமைப்புகள் சேதம்! தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு!
/

வட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு! விமான, ரயில் சேவை பாதிப்பு!

பல்வேறு விமானங்கள் தாமதமானதுடன், சில விமானங்கள் ரத்தும் செய்யப்பட்டன.

News image

கோப்புப் படம்

Updated On :4 ஜனவரி 2025, 9:37 am IST

வட மாநிலங்களில் கடந்த சில நாள்களாக கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. இதன் காரணமாக விமான சேவையும் ரயில் சேவையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

தில்லி விமான நிலையம் உள்பட பல்வேறு பகுதிகளில், 100 அடிக்கு அப்பால் உள்ள எதுவும் தெரியாத அளவுக்கு பனிப்பொழிவு கொட்டியது. சனிக்கிழமை (ஜன. 4) காலை விமான ஓடுபாதை முற்றிலும் கண்ணுக்குத் தெரியாத அளவுக்கு பனிமூட்டம் இருந்ததால், தில்லி விமான நிலையத்தில் விமான சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தில்லியில் சனிக்கிழமை காலை 5.30 மணி நிலவரப்படி, 10.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

தற்போதுள்ள நிலைமைகள் காரணமாக 250-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகின; மேலும் சுமார் 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. கொல்கத்தா ரயில் நிலையத்திலும் 40 விமானங்கள் தாமதமானதுடன், 5 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டன. பனிமூட்டத்தால் விமான மற்றும் ரயில் சேவை பாதிக்கப்பட்டதுடன் சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தில்லி, நொய்டா, குருகிராம், லக்னௌ, ஆக்ரா, கர்னல், காஜியாபாத், அமிர்தசரஸ், ஜெய்ப்பூர் உள்பட பல இடங்களில் சாலைகளின் தெரிவுநிலை குறைந்து வருவதால் வாகனங்கள் மிகக் குறைந்த வேகத்தில் இயங்கின.

பஞ்சாப், ஹரியாணா, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், பிகார், மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களும் அடர்த்தியான மூடுபனியால் பாதிக்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.