வட மாநிலங்களில் கடந்த சில நாள்களாக கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. இதன் காரணமாக விமான சேவையும் ரயில் சேவையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
தில்லி விமான நிலையம் உள்பட பல்வேறு பகுதிகளில், 100 அடிக்கு அப்பால் உள்ள எதுவும் தெரியாத அளவுக்கு பனிப்பொழிவு கொட்டியது. சனிக்கிழமை (ஜன. 4) காலை விமான ஓடுபாதை முற்றிலும் கண்ணுக்குத் தெரியாத அளவுக்கு பனிமூட்டம் இருந்ததால், தில்லி விமான நிலையத்தில் விமான சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தில்லியில் சனிக்கிழமை காலை 5.30 மணி நிலவரப்படி, 10.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
தற்போதுள்ள நிலைமைகள் காரணமாக 250-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகின; மேலும் சுமார் 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. கொல்கத்தா ரயில் நிலையத்திலும் 40 விமானங்கள் தாமதமானதுடன், 5 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டன. பனிமூட்டத்தால் விமான மற்றும் ரயில் சேவை பாதிக்கப்பட்டதுடன் சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தில்லி, நொய்டா, குருகிராம், லக்னௌ, ஆக்ரா, கர்னல், காஜியாபாத், அமிர்தசரஸ், ஜெய்ப்பூர் உள்பட பல இடங்களில் சாலைகளின் தெரிவுநிலை குறைந்து வருவதால் வாகனங்கள் மிகக் குறைந்த வேகத்தில் இயங்கின.
பஞ்சாப், ஹரியாணா, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், பிகார், மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களும் அடர்த்தியான மூடுபனியால் பாதிக்கப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சூறைக்காற்றுடன் மழை! தில்லி விமான நிலையத்தில் படிக்கட்டு மோதி 3 விமானங்கள் சேதம்: டிஜிசிஏ விசாரணை
தில்லியில் பலத்த காற்றுடன் மழை! மூன்று விமானங்கள் சேதம்!

ஈரான் தாக்கிய சில மணிநேரங்களில்! குவைத்தில் இருந்து மீண்டும் விமானங்கள் இயக்கம்!

தமிழகத்தில் ‘எபோலா’ தொற்று பாதிப்பு இல்லை
விடியோக்கள்
முதல்வர் விஜய்யின் தில்லி பயணம் வெற்றியா? | TVK | CM Vijay | PM Modi | Rahul | Vijay Delhi Visit

ஏர் இந்தியா விமான விபத்து! முதலாம் ஆண்டு நினைவு நாள்! | Air India

NEET மறுதேர்வில் செய்ய வேண்டிய மாற்றம் | NEET Re-Exam 2026 | +2 Students | NEET result controversy



