6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சத்தீஸ்கரில் என்கவுன்டரில் 4 நக்சல்கள், காவலர் ஒருவர் பலி

சத்தீஸ்கரில் நடந்த என்கவுன்டரில் நான்கு நக்சல்கள், காவலர் ஒருவர் பலியானார்கள்.

News image
நக்சல்கள் சுட்டுக் கொலை (கோப்புப் படம்)
Updated On :5 ஜனவரி 2025, 6:15 am

DIN

சத்தீஸ்கரில் நடந்த என்கவுன்டரில் நான்கு நக்சல்கள், காவலர் ஒருவர் பலியானார்கள்.

சத்தீஸ்கர் மாநிலம், நாராயண்பூர் மற்றும் தண்டேவாடா மாவட்டங்களின் எல்லையில் உள்ள தெற்கு அபுஜ்மாத் வனப்பகுதியில் சிறப்பு அதிரடிப் படையின் கூட்டுக் குழு சனிக்கிழமை மாலை நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தது.

அப்போது நடந்த என்கவுன்டரில் நான்கு நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

மேலும் இந்த சம்பவத்தில் தலைமைக் காவலர் ஒருவரும் பலியானார். நிகழ்விடத்திலிருந்து நான்கு நக்சல்களின் உடல்கள் மீட்கப்பட்டிப்பதோடு ஏகே-47 ரக துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன.

நக்சல் அச்சுறுத்தலை முடிவுக்குக் கொண்டுவர போராட்டம் தொடரும் என்று முதல்வர் விஷ்ணு தியோ சாய் தெரிவித்துள்ளார்.

துப்பாக்கிச் சண்டையில் காவலர் பலியானதற்கு முதல்வர் இரங்கல் தெரிவித்துள்ளார். "தலைமைக் காவலர் சன்னு கரம் என்கவுன்டரில் வீரமரணம் அடைந்தார்.

அவரது தியாகம் வீண் போகாது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.