மகாராஷ்டிரத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தால், குடியிருந்த 250 பேரும் வெளியேற்றப்பட்டனர்.
மகாராஷ்டிரத்தில் தாணே மாவட்டத்தில் ஸ்ரீநகரில் அமைந்துள்ள ஐந்து மாடி கட்டடத்தின் தரைத் தளத்தில் இருந்த சலவைக் கடையில் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 12) காலை 5 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.
இதனையடுத்து, குடியிருப்பில் இருந்த சுமார் 250 பேரும் பாதுகாப்பாக கட்டடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, தகவல் அறிந்த தீயணைப்புப் படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து ஒரு மணிநேரத்தில் தீயை அணைத்தனர்.
பின்னர், குடியிருப்பாளர்கள் தங்கள் குடியிருப்புகளுக்குள் அனுமதிக்கப்பட்டனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையும் படிக்க: சொல்லப் போனால்... டிரம்ப்பின் நாடு பிடிக்கும் அதிரடித் திட்டம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரசு அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்வாடகைக்கு வசிப்பவா்களால் அச்சம்: கரூா் ஆட்சியரிடம் பொதுமக்கள் புகாா்

பாங்காக் மதுக்கூடத்தில் தீ விபத்து! 27 பேர் பலி!

பெல்ஜியம் அடுக்குமாடி குடியிருப்பில் தீ

நொய்டா: 21-ஆவது அடுக்குமாடி குடியிருப்பில் ஏ.சி. வெடித்து தீ விபத்து
விடியோக்கள்

உதயநிதியை இளைய கலைஞர் ஆக்கிக்கொண்டிருக்கிறார்கள்! | R.S. Bharathi | DMK | TVK



