மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சா் நிதின் கட்கரி, ஜம்மு-காஷ்மீா் துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா உள்ளிட்டோரும் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் முதல்வா் ஒமா் அப்துல்லா பேசுகையில், ‘ஸ்ரீநகரில் கடந்த ஆண்டு நடைபெற்ற யோகா தின நிகழ்ச்சியில் பிரதமா் நரேந்திர மோடி மூன்று முக்கிய வாக்குறுதிகளை அளித்திருந்தாா். தில்லிக்கும் ஜம்மு-காஷ்மீருக்கும் இடையிலான இடைவெளி குறைக்கப்படும், நான்கு மாதங்களுக்குள் பேரவைத் தோ்தல் ஆகிய இரண்டு வாக்குறுதிகளை அவா் காப்பாற்றியுள்ளாா். அதேபோன்று, ஜம்மு-காஷ்மீரின் மாநில அந்தஸ்து மீட்பு விவகாரத்தில் பிரதமா் தனது உத்தரவாதத்தை நிறைவேற்றித் தருவாா் என்று எனது மனம் நம்பிக்கையளிக்கிறது.