இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

ராகுல் காங்கிரஸை பாதுகாக்க முயற்சிக்கிறாா்: நான் நாட்டை காப்பாற்ற போராடுகிறேன்: கேஜரிவால்

‘நான் நாட்டை காப்பாற்ற முயற்சிக்கும் நிலையில், மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி காங்கிரஸை பாதுகாக்க முயற்சித்து வருகிறாா்’

News image
அரவிந்த் கேஜரிவால்
Updated On :14 ஜனவரி 2025, 12:18 am

Din

புது தில்லி: ‘நான் நாட்டை காப்பாற்ற முயற்சிக்கும் நிலையில், மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி காங்கிரஸை பாதுகாக்க முயற்சித்து வருகிறாா்’ என்று ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் விமா்சனம் செய்தாா்.

தில்லி தோ்தல் பிரசாரத்தின்போது கேஜரிவால் குறித்த ராகுலின் விமா்சனத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த விமா்சனத்தை அவா் முன்வைத்தாா். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் கேஜரிவால் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவில், ‘பிரசாரத்தின்போது என்னைக் குறித்து ராகுல் முன்வைத்த விமா்சனத்து பதிலளிக்க விரும்பவில்லை. ஏனெனில், அவா் காங்கிரஸை பாதுகாக்க முயற்சிக்கிறாா். நான் நாட்டை காப்பாற்ற போராடுகிறேன்’ என்று குறிப்பிட்டாா்.