பாஜக, ஆர்.எஸ்.எஸ் அமைப்பை மட்டுமல்ல, இந்திய அரசை எதிர்த்து எதிர்க்கட்சிகள் போராடுவதாக ராகுல் காந்தி தெரிவித்த கருத்துக்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
தில்லியில் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமை அலுவலகம் இன்று திறக்கப்பட்டது. திறப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி,
1947-ல் இந்தியா உண்மையான சுதந்திரத்தைப் பெறவில்லை; ராமர் கோவில் கட்டப்பட்ட பிறகே இந்தியா சுதந்திரம் அடைந்ததாக மோகன் பாகவத் கூறிய கருத்து ஒவ்வொரு இந்தியரையும் அவமதிக்கும் செயல் எனத் தெரிவித்திருந்தார்.
மேலும், பாஜகவும் ஆர்.எஸ்.எஸ்ஸும் நாட்டின் ஒவ்வொரு அமைப்பையும் கைப்பற்றிவிட்டன. தற்போது பாஜக, ஆர்.எஸ்.எஸ்-க்கு எதிராக மட்டுமல்லாமல் இந்திய அரசுக்கு எதிராக நாம் போராடுவதாக ராகுல் குறிப்பிட்டிருந்தார்.
ராகுல் காந்தியின் இக்கருத்துக்கு பாஜக தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது,
காங்கிரஸ் கட்சியில் மறைக்க ஏதுமில்லை. காங்கிரஸின் கோரமுகம் அக்கட்சியின் தலைவராலேயே வெளிப்பட்டுள்ளது. நாடு எதை அறிந்துவைத்துள்ளது என்பதைத் தெளிவாகக் கூறியதற்காக ராகுலை பாராட்டுகிறேன். அதாவது இந்தியாவுக்கு எதிராக ராகுல் போராடுகிறார்.
ராகுல் காந்தியும் அவரைச் சார்ந்தவர்களும் நகர்புற நக்சல்கள் மற்றும் அதற்கு ஆதரவளிக்கும் மாநிலங்களுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளனர் என்பதில் எந்தவித ரகசியமும் இல்லை. அவருடைய செயல்கள் இதனை உறுதிப்படுத்துகின்றன. ராகுல் செய்தவை அல்லது கூறியவை அனைத்தும் இந்தியாவை பிளவுபடுத்தும் வகையிலும் சமூகத்தில் விரிசல் ஏற்படுத்தும் வகையிலும் மட்டுமே உள்ளது என நட்டா பதிவிட்டுள்ளார்.
ராகுல் காந்தியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அரசியலமைப்பு புத்தகத்தை கையில் வைத்திருப்பது எதற்காக? என ராகுலுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
Hidden no more, Congressâ ugly truth now stands exposed by their own leader.
— Jagat Prakash Nadda (@JPNadda) January 15, 2025
I 'compliment' Mr. Rahul Gandhi for saying clearly what the nation knows- that he is fighting the Indian state!
It is not a secret that Mr. Gandhi and his ecosystem have close links with Urban Naxalsâ¦
இது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது,
அரசியலமைப்பின் மீது பிரமாணம் செய்து பதவியேற்ற காங்கிரஸ் கட்சி, இப்போது, "நாங்கள் இப்போது பாஜக, ஆர்எஸ்எஸ் மட்டுமல்லாமல் இந்திய அரசையும் எதிர்த்துப் போராடுகிறோம்" என்று கூறுகிறது. அப்படியானால், ராகுல் காந்தி எதற்காக அரசியலமைப்பின் நகலை கையில் வைத்திருக்கிறார்? என நிர்மலா சீதாராமன் பதிவிட்டுள்ளார்.
The LoP, who was sworn in by taking oath on the Constitution, is now saying, âWe are now fighting the BJP, the RSS and the Indian State itself.â
— Nirmala Sitharaman (@nsitharaman) January 15, 2025
So, @INCIndia and @RahulGandhi, what for are you carrying a copy of the constitution in your hand? https://t.co/pi3hNpoDWZ
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஆக. 1-இல் சென்னை வருகிறார் ராகுல்: கே.சி.வேணுகோபால் தகவல்!

தில்லியில் ராகுலுக்கு நன்றி தெரிவிக்கும் சுவரொட்டிகளை வெளியிட்ட இளைஞர் காங்கிரஸ்!

நாடாளுமன்ற பெரும்பான்மைக்காக எதிா்க்கட்சிகளில் செயற்கைப் பிளவு: காங்கிரஸ் குற்றச்சாட்டுக்கு பாஜக மறுப்பு

ராகுலின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு எங்கிருந்து நிதி வருகிறது? பாஜக கேள்வி
விடியோக்கள்

சீமானின் கனவு பலிக்குமா ? | Seeman | NTK | TVK | CM Vijay | DMK | ADMK | Naam tamilar katchi



