மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

காஜியாபாத்: வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 4 பேர் பலி

காஜியாபாத் வீட்டில் நிகழ்ந்த தீ விபத்தில் சிக்கி பெண் உட்பட 4 பேர் பலியானார்கள்.

News image
தீ விபத்து(கோப்புப்படம்)
Updated On :19 ஜனவரி 2025, 9:02 am

DIN

காஜியாபாத் வீட்டில் நிகழ்ந்த தீ விபத்தில் சிக்கி பெண் உட்பட 4 பேர் பலியானார்கள்.

இதுகுறித்து தலைமை தீயணைப்பு அதிகாரி ராகுல் கூறியதாவது, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மின்கசிவு காரணமாக வீடு ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது.

இதில் 32 வயதான பெண் மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் உட்பட நான்கு பேர் பலியானார்கள்.

அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்ட போது குடும்பத்தினர் தூங்கிக் கொண்டிருந்தனர். தீயை அணைத்த பிறகு, தீயணைப்பு வீரர்கள் வீட்டினுள் இருந்து உடல்களை மீட்டனர்.

பலியானவர்கள் குல்பஹர் (32) மற்றும் அவரது இரண்டு மகன்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பலியானவர்களில் அதே வீட்டில் வசிக்கும் உறவினரின் மகனும் அடங்குவார் என்றும் பெண்ணின் கணவர் ஷாநவாஸ் காயமின்றி தப்பினார் என்றும் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.