காஜியாபாத்: வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 4 பேர் பலி
காஜியாபாத் வீட்டில் நிகழ்ந்த தீ விபத்தில் சிக்கி பெண் உட்பட 4 பேர் பலியானார்கள்.


காஜியாபாத் வீட்டில் நிகழ்ந்த தீ விபத்தில் சிக்கி பெண் உட்பட 4 பேர் பலியானார்கள்.
இதுகுறித்து தலைமை தீயணைப்பு அதிகாரி ராகுல் கூறியதாவது, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மின்கசிவு காரணமாக வீடு ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது.
இதில் 32 வயதான பெண் மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் உட்பட நான்கு பேர் பலியானார்கள்.
அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்ட போது குடும்பத்தினர் தூங்கிக் கொண்டிருந்தனர். தீயை அணைத்த பிறகு, தீயணைப்பு வீரர்கள் வீட்டினுள் இருந்து உடல்களை மீட்டனர்.
பலியானவர்கள் குல்பஹர் (32) மற்றும் அவரது இரண்டு மகன்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பலியானவர்களில் அதே வீட்டில் வசிக்கும் உறவினரின் மகனும் அடங்குவார் என்றும் பெண்ணின் கணவர் ஷாநவாஸ் காயமின்றி தப்பினார் என்றும் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...