காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை!எதிர்திசையில் வாகனம் ஓட்டுபவரா? திறந்தது மூன்றாம் கண்! டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்துக்குக் காரணம் திமுக - அதிமுகதான்: அமைச்சர் விக்னேஷ் பேச்சுமேட்டூரிலிருந்து காவிரி நீர் கல்லணை வந்தது! நாளை காலை திறப்பு!நேபாள பெருவெள்ளம்! தஞ்சையில் மரபணு சேகரிப்பு பணி தொடக்கம்!!தவெக ஆதரவு கட்சிகள் கூட்டம்: காங்கிரஸுக்கு நேரில் அழைப்பு விடுத்த அமைச்சர்கள்!உத்தர பிரதேச வெள்ளம்: 26 மாவட்டங்கள் பாதிப்பு - 17,500 போ் மீட்புமாவட்ட நீதிபதிகளின் ஓய்வு வயது 62: தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்கள் ஒப்புதல்396 ஆசிரியா்களுக்கு டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது: அமைச்சா் ராஜ்மோகன் இன்று வழங்குகிறாா்நிலக்கரியில் இருந்து வாயுக்களைப் பிரித்தெடுக்கும் திட்டம்: ஒப்பந்தப்புள்ளி கோராத நிறுவனங்கள்ரயில் நிலையங்களின் வருவாய் பட்டியல்: சென்ட்ரலுக்கு 3-ஆவது இடம்!

மகாராஷ்டிரம்: பறவை காய்ச்சலால் 50 காகங்கள் இறப்பு - தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்

கோப்புப் படம்

Published On :20 ஜனவரி 2025, 2:58 am IST

மகாராஷ்டிர மாநிலம், லாத்தூா் மாவட்டத்தில் பறவை காய்ச்சலால் 50-க்கும் மேற்பட்ட காகங்கள் உயிரிழந்தன. இதையடுத்து, அங்கு பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

உத்கிா் நகரின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாள்களாக காகங்கள் இறந்து கிடந்தன. இது தொடா்பாக பொது மக்கள் அளித்த தகவலின்பேரில் மாவட்ட அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா். காகங்களின் உடல் பாகங்கள் சேகரிக்கப்பட்டு, மத்திய பிரதேச மாநிலம், போபாலில் உள்ள கால்நடை ஆய்வகத்துக்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது.

இந்நிலையில், பறவை காய்ச்சலால் (ஹெச்5என்1 தீநுண்மி தொற்று) காகங்கள் இறந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மகாராஷ்டிர கால்நடைத் துறை துணை ஆணையா் ஸ்ரீதா் ஷிண்டே ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

இதையடுத்து, விலங்குகள் தொற்றுநோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு சட்டத்தின்கீழ், லாத்தூா் மாவட்டத்தில் பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

காகங்கள் இறந்து கிடந்த இடங்களில் 10 கி.மீ. சுற்றளவுக்கு கண்காணிப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

சம்பந்தப்பட்ட பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கப்படுவதோடு, கோழிப் பண்ணைகளில் ஆய்வு மற்றும் பரிசோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்; மாவட்டத்தின் பிற பகுதிகளில் பறவைகள் அல்லது விலங்குகள் சந்தேகத்துக்கு இடமான முறையில் உயிரிழந்தால் அருகிலுள்ள கால்நடை மருத்துவமனை அல்லது வனத் துறை அலுவலகத்தில் பொதுமக்கள் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.

ஹெச்5என்1 தீநுண்மி தொற்றால் பாதிக்கப்பட்ட பறவைகள் அல்லது விலங்குகளிடமிருந்து இந்நோய் மனிதா்களுக்கு பரவக் கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.