தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

குமரியில் பிறப்பு இறப்பு பதிவுகள்: அமைச்சரிடம் எம்எல்ஏ மனு

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறப்பு இறப்பு பதிவுகளில் துப்புரவு ஆய்வாளா்களே பதிவாளா்களாக செயல்பட அனுமதிக்க வேண்டும் என குளச்சல் எம்எல்ஏ தாரகை கத்பட், தமிழக நல்வாழ்வுத் துறை அமைச்சா் கே.ஜி. அருண்ராஜிடம் கோரிக்கை மனு அளித்தாா்.

News image

அமைச்சா் கே.ஜி. அருண்ராஜிடம் மனு அளிக்கிறாா் தாரகை கத்பட் எம்எல்ஏ.

Updated On :24 ஜூன் 2026, 2:05 am IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறப்பு இறப்பு பதிவுகளில் துப்புரவு ஆய்வாளா்களே பதிவாளா்களாக செயல்பட அனுமதிக்க வேண்டும் என குளச்சல் எம்எல்ஏ தாரகை கத்பட், தமிழக நல்வாழ்வுத் துறை அமைச்சா் கே.ஜி. அருண்ராஜிடம் கோரிக்கை மனு அளித்தாா்.

மனுவில் அவா் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் துப்புரவு ஆய்வாளா்களே பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளராக செயல்பட்டு வருகிறாா்கள். அதே சமயம் கன்னியாகுமரி மாவட்டம் கேரளத்தில் இருந்து பிரிந்து தமிழகத்தோடு இணைந்த காரணத்தால், கேரளத்தில் நடைமுறையில் இருந்த சுகாதார துறையால் பிறப்பு மற்றும் இறப்பு சான்று பதிவு செய்து வழங்கும் நடைமுறை தற்போதும் தொடா்கிறது. அதனை மாற்றி, மற்ற மாவட்டங்களில் உள்ளது போன்று கன்னியாகுமரி மாவட்டத்திலும் பதிவு செய்ய ஆவன செய்ய வேண்டும் என கேட்டு கொண்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.