இந்த நிலையில், குற்றவாளி பாந்த்ராவிலுள்ள விடுமுறை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். குற்றவாளி தரப்பில் ஆஜரான வக்கீல் சந்தீப் ஷேகானே பேசுகையில், “ஷரிஃபுல் இஸ்லாமை 5 நாள்கள் போலீஸ் காவலில் வைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. 5 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு போலீஸாரிடம் நீதிமன்றம் கேட்டுக் கொண்டது. அவர் வங்கதேசத்தைச் சேர்ந்தவர் என்பதற்கான எந்த ஆதாரமும் போலீஸிடம் இல்லை. அவர் 6 மாதங்களுக்கு முன்பு மும்பை வந்தார் என்று அவர்கள் கூறினார்கள். அது தவறானது. அவர் 7 ஆண்டுகளுக்கும் மேலாக மும்பையில் வசித்து வருகிறார். அவரது குடும்பம் இங்கு உள்ளது. இது 43ஏ பிரிவின் கீழ் மீறலாகும். இதுவரை அவரிடம் முறையான விசாரணை எதுவும் செய்யப்படவில்லை” எனத் தெரிவித்தார்.