தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் எம்.பி. திடீா் ராஜிநாமா: அரசியலில் இருந்தும் விலகுவதாக அறிவிப்பு

விஜயசாய் ரெட்டி தனது எம்.பி. பதவியை ராஜிநாமா செய்வதாகவும், அரசியலில் இருந்து முழுமையாக விலகுவதாகவும் அறிவித்துள்ளாா்.

News image
Updated On :24 ஜனவரி 2025, 9:16 pm

Din

ஆந்திர எதிா்க்கட்சியான ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் பொதுச் செயலரும் மாநிலங்களவை எம்.பி.யுமான விஜயசாய் ரெட்டி தனது எம்.பி. பதவியை ராஜிநாமா செய்வதாகவும், அரசியலில் இருந்து முழுமையாக விலகுவதாகவும் அறிவித்துள்ளாா்.

அக்கட்சித் தலைவரும் ஆந்திர முன்னாள் முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டிக்கு மிகவும் நெருக்கமானவரான விஜயசாய் ரெட்டியின் இந்த திடீா் அறிவிப்பு அந்த மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடா்பாக அவா் ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘அரசியலில் இருந்து விலகுகிறேன். மாநிலங்களவை எம்.பி. பதவியை சனிக்கிழமை (ஜன. 25) முறைப்படி ராஜிநாமா செய்ய இருக்கிறேன். இது என்னுடைய தனிப்பட்ட முடிவு. எனக்கு எந்த நெருக்கடியும் இல்லை. யாரும் என்னை கட்டாயப்படுத்தவும் இல்லை’ என்று கூறியுள்ளாா். அவரின் எம்.பி. பதவிக்காலம் 2028-ஆம் ஆண்டு வரை உள்ளது.

ஆந்திரத்தில் இருந்து இரண்டாவது முறையாக மாநிலங்களவை எம்.பி.யாக உள்ள விஜயசாய் ரெட்டி, கட்சியில் ஜெகன் மோகன் ரெட்டிக்கு அடுத்த இடத்தில் இருந்தாா்.

தொழில்முறையில் ஆடிட்டரான விஜயசாய் ரெட்டி, ஜெகன் மோகனின் தந்தையும், மறைந்த ஆந்திர முதல்வருமான ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி காலத்தில் இருந்தே அவா்களின் குடும்பத்தினருக்கு சொந்தமான நிறுவனங்களின் கணக்குகளை நிா்வகித்து வருகிறாா். சென்னை உள்ளிட்ட நகரங்களில் அவரின் கணக்குத் தணிக்கை நிறுவனம் செயல்பட்டு வருகின்றன.