பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

மொபைல் போன் கேட்ட சகோதரிகள் தற்கொலை!

உத்தரப் பிரதேசத்தில் மொபைல் போன் வாங்கித் தராததால் சகோதரிகள் இருவர் தற்கொலை

News image

கோப்புப் படம்

Updated On :25 ஜனவரி 2025, 6:37 pm IST

உத்தரப் பிரதேசத்தில் மொபைல் போன் வாங்கித் தராததால் சகோதரிகள் இருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் முசாபர்நகரைச் சேர்ந்த சகோதரிகளான 17 வயதான கல்லூரி மாணவியும், பன்னிரண்டாம் வகுப்பு மாணவியும் மொபைல் போன் வாங்கித் தருமாறு அவர்களின் பெற்றோரிடம் கேட்டு வந்துள்ளனர். இந்த நிலையில், மீண்டும் ஜனவரி 17 ஆம் தேதியிலும் அவர்களின் தாயாரிடம் மொபைல் போன் கேட்டு வற்புறுத்தியுள்ளனர்.

ஆனால், அவர்களின் வறுமையைக் காரணம் காட்டிய மாணவிகளின் தாயார், ’’தந்தையால் பள்ளிச் செலவை மட்டுமே கவனிக்க முடியும்; மொபைல் போன் வாங்கித் தர இயலாது’’ என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார். இதனையடுத்து, மறுநாள் காலையில் மாணவிகள் இருவரும் படுக்கையறையில் உயிரிழந்திருப்பதைக் கண்டு, அவர்கள் இருவரும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

இருப்பினும், மாணவிகளின் தற்கொலை குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்காமல், அவர்களின் உடலை தகனம் செய்து விட்டனர். இந்த நிலையில்தான், இந்தச் சம்பவம் குறித்து அப்பகுதியினர் சமூக ஊடகங்களில் பதிவிட்டதையடுத்து, வியாழக்கிழமையில் இந்தச் சம்பவம் குறித்து அறிந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், இந்த வழக்கு தொடர்பாக விசாரணையும் நடத்தி வருகின்றனர்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.