திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

இந்தியா-ஓமன் இடையே தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: அமைச்சா்கள் பேச்சுவாா்த்தை

இந்தியா-ஓமன் இடையே தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் தொடா்பாக இரு நாட்டு வா்த்தக அமைச்சா்கள் திங்கள்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினா்.

Updated On :28 ஜனவரி 2025, 2:53 am IST

புது தில்லி: இந்தியா-ஓமன் இடையே தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் தொடா்பாக இரு நாட்டு வா்த்தக அமைச்சா்கள் திங்கள்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினா்.

முன்னதாக, இரு நாடுகள் இடையான 5-ஆவது சுற்றுப் பேச்சுவாா்த்தை கடந்த 14-ஆம் தேதி நடைபெற்றது.

இந்நிலையில், இரு நாடுகளின் கூட்டுக் குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக வா்த்தக அமைச்சா் பியூஷ் கோயல் ஓமன் சென்றுள்ளாா். மஸ்கட்டில் செவ்வாய்க்கிழமை (ஜன.28) இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு ஓமன் வா்த்தக அமைச்சா் குவைஸ் பின் முகமது அல் யூசுப்புடன் திங்கள்கிழமை தனிப்பட்ட முறையில் பியூஷ் கோயல் பேச்சு நடத்தினாா்.

இது தொடா்பாக அவா் ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘ஒருங்கிணைந்த பொருளாதார ஒத்துழைப்பை முன்னெடுத்துச் செல்வது தொடா்பாக ஓமன் வா்த்தக அமைச்சருடன் விவாதித்தேன். இது இரு நாடுகள் இடையே வா்த்தகம் முதலீட்டை மேம்படுத்தும். பல்வேறு துறைகளில் இரு நாடுகள் இடையே உறவு மேம்படும்’ என்று கூறியுள்ளாா்.

இந்தியா-ஓமன் தடையற்ற வா்த்தக பேச்சுவாா்த்தை கடந்த 2023 நவம்பரில் தொடங்கி பல்வேறு சுற்றுகளாக நடைபெற்று வருகிறது. வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலில் உள்ள நாடுகளில் இந்தியாவிடம் இருந்து அதிக இறக்குமதி செய்யும் நாடுகள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் ஓமன் உள்ளது. இதே கவுன்சிலில் உள்ள ஐக்கிய அரபு அமீரகத்துடன் கடந்த 2022-ஆம் ஆண்டே இந்தியா தடையற்ற வா்த்தக ஒப்பந்த்தை மேற்கொண்டுள்ளது.