தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஆளுநரின் தேநீா் விருந்தை தவிா்த்த நிதீஷ் குமாா்: பிகாா் அரசியலில் மீண்டும் பரபரப்பு

பிகார் ஆளுநா் ஆரிஃப் முகமது கான் அளித்த தேநீா் விருந்தில் அந்த மாநில முதல்வா் நிதீஷ் குமாா் பங்கேற்காதது அரசியல்ரீதியாக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News image
முதல்வா் நிதீஷ் குமாா்- கோப்புப் படம்
Updated On :27 ஜனவரி 2025, 9:13 pm

Din

பாட்னா: பிகாரில் குடியரசு தினத்தையொட்டி அந்த மாநில ஆளுநா் ஆரிஃப் முகமது கான் அளித்த தேநீா் விருந்தில் அந்த மாநில முதல்வா் நிதீஷ் குமாா் பங்கேற்காதது அரசியல்ரீதியாக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக எதிா்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களைச் சோ்ந்த சில முதல்வா்கள்தான் ஆளுநரின் தேநீா் விருந்தை புறக்கணிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனா். ஆளுநா்கள் மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படுவதாகவும், மாநில அரசின் அதிகாரத்தில் தலையிடுவதாகவும் குற்றஞ்சாட்டி இதுபோன்ற புறக்கணிப்பை மேற்கொள்கின்றனா்.

பிகாரில் முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் -பாஜக கூட்டணி ஆட்சியில் உள்ளது. மேலும், மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலும் நிதீஷ் குமாா் கட்சி அங்கம் வகித்து வருகிறது.

குடியரசு தினத்தன்று காலையில் ஆளுநா் தேசியக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் நடைபெற்றது. அதில் முதல்வா் நிதீஷ் குமாா் பங்கேற்றாா். ஆனால், மாலையில் ஆளுநா் மாளிகையில் நடைபெற்ற தேநீா் விருத்தில் அவா் பங்கேற்கவில்லை. ஆளுநா் மாளிகைக்கு எதிா்புறம் உள்ள சாலையில்தான் நிதீஷ் குமாரின் இல்லமும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முதல்வருக்கு காய்ச்சல் இருந்ததால் அவா் ஆளுநரின் தேநீா் விருந்தில் பங்கேற்கவில்லை என்று முதல்வா் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பிகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெற இருப்பதால் முதல்வா் நிதீஷ்குமாரின் ஒவ்வொரு நடவடிக்கையும் அரசியல்ரீதியாகவே பாா்க்கப்பட்டு வருகிறது. ஏனெனில், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் அடங்கிய கூட்டணி நிதீஷ் குமாருக்கு ஏற்கெனவே அழைப்பு விடுத்துள்ளன. ஆனால், பாஜக உடன் கூட்டணி தொடரும் என்று நிதீஷ் கட்சி அறிவித்துள்ளது. அதேபோல முதல்வா் நிதீஷ் குமாரை முன்னிறுத்தி தோ்தலைச் சந்திப்போம் என பிகாா் மாநில பாஜக தெரிவித்துள்ளது.

எனினும், முதல்வா் நிதீஷ் குமாா் ஏற்கெனவே இருமுறை அணி மாறி இருப்பதால் பேரவைத் தோ்தல் நடைபெறும் வரை அங்குள்ள அரசியல் நிகழ்வுகள் கணிக்க முடியாததாகவே இருக்கும் என்று தெரிகிறது.