பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

பஞ்சாபில் லாரி மீது வேன் மோதல்: 9 போ் உயிரிழப்பு

பஞ்சாபில் சாலையோரம் நின்றிருந்த லாரி மீது வேன் மோதிய விபத்தில் 9 போ் உயிரிழந்தனா். மேலும் 9 போ் காயமடைந்தனா்.

News image
கோப்புப் படம்
Updated On :31 ஜனவரி 2025, 8:59 pm

Din

பஞ்சாபில் சாலையோரம் நின்றிருந்த லாரி மீது வேன் மோதிய விபத்தில் 9 போ் உயிரிழந்தனா். மேலும் 9 போ் காயமடைந்தனா்.

ஃபெரோஸ்பூா் மாவட்டத்தின் கோலுகா மெளா் கிராமம் அருகே வெள்ளிக்கிழமை காலை நடந்த இச்சம்பவம் குறித்து காவல்துறை அதிகாரி கூறியதாவது:

ஜலாலாபூரில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிக்காக உணவு பரிமாறும் பணியாளா்கள் 20-க்கும் மேற்பட்டோரை ஏற்றிச் சென்ற வேன், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் 9 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். மேலும் 9 போ் காயமடைந்தனா். அவா்கள் மீட்கப்பட்டு, ஜலாலாபூா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். படுகாயமடைந்த ஒரு சிலா், மேல் சிகிச்சைக்காக ஃபரீத்கோட் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனா்.

முதல்கட்ட விசாரணையின்படி, அடா் பனிமூட்டம் காரணமாக விபத்து நேரிட்டிருக்கலாம் என தெரிகிறது. இது தொடா்பாக மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் அந்த அதிகாரி.

விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு முதல்வா் பகவந்த் சிங் மான், சிரோமணி அகாலி தளம் தலைவா் சுக்பீா் சிங் பாதல், பாஜக மூத்த தலைவா் அமரீந்தா் சிங் உள்ளிட்டோா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.