தில்லி-என்சிஆர் பகுதியில் கடந்த 2 நாள்களில் 2ஆவது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதுதொடர்பாக தேசிய புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், வெள்ளிக்கிழமை மாலை தில்லி-என்சிஆரின் சில பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது.
இது ரிக்டர் அளவில் 3.7 ஆகப் பதிவானது. இரவு 7:49 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
10 கி.மீ. ஆழத்திலும் ஹரியாணா மாநிலம், ஜஜ்ஜர் பகுதியை மையமாகக் கொண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும் இந்த நிலநடுக்கத்தால் எந்த சேதமும் ஏற்பட்டதாக தகவல் இல்லை. கடந்த இரண்டு நாள்களில் தில்லியின் என்சிஆர் பகுதியில் ஏற்பட்ட இரண்டாவது நிலநடுக்கம் இதுவாகும்.
முன்னதாக வியாழக்கிழமை காலை ஜஜ்ஜார் அருகே 4.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
Summary
The tremors of magnitude 3.7 were felt around 7:49 pm and the epicentre of the earthquake was at Jhajjar in Haryana.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மதுராந்தகத்தில் அதிமுக வேட்பாளா் மரகதம் குமரவேல் 2 ஆவது முறையாக வெற்றி

திருச்செந்தூா் தொகுதியில் 7 ஆவது முறையாக அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் வெற்றி

தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு!

மகாராஷ்டிரத்தில் மிதமான நிலநடுக்கம்: மக்கள் அச்சம்!
வீடியோக்கள்

29 பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெகவின் பெரும்பான்மைக்கு இன்னும் என்ன தேவை? | News and Views | Epi - 31 |
தினமணி செய்திச் சேவை
இண்டியா கூட்டணியில் தவெக சேர்ந்தால்...: கனிமொழி சோமு Exclusive
தினமணி செய்திச் சேவை
பிளே ஆஃப் சுற்று: சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்? | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை


