மும்பை பங்குச்சந்தை அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
தெற்கு மும்பையில் உள்ள மும்பை பங்குச்சந்தை அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரிக்கு, அந்த கட்டடத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக செவ்வாய்க்கிழமை காலை மிரட்டல் விடுக்கப்பட்டது.
இதுதொடர்பாக மும்பை காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்ட நிலையில், உடனடியாக மும்பை பங்குச்சந்தை அலுவலகத்துக்கு விரைந்த காவலர்கள் வெடிகுண்டு பரிசோதனை நிபுணர்களுடன் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையின் நிறைவில் மிரட்டல் வெறும் புரளி எனக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ‘காம்ரேட் பினராயி விஜயன்’ என்று கேரள முதல்வரின் பெயரில் போலியாக உருவாக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரியில் இருந்து மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, அடையாளம் தெரியாத நபர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள மும்பை காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
நேற்று மும்பையில் உள்ள 3 தனியார் பள்ளிகளுக்கும் அமிருதசரஸில் உள்ள பொற்கோவிலுக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. சோதனையின் முடிவில் புரளி எனத் தெரியவந்தது.
Summary
A bomb threat was made to the Bombay Stock Exchange office on Tuesday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நடிகை த்ரிஷா வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!
ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!

பிகார் சட்டப்பேரவைக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்!

தில்லியில் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு


