அப்போது, ‘வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை நாங்கள் எதிா்க்கவில்லை; மாறாக, அதற்கான நடைமுறையைத்தான் எதிா்க்கிறோம். நிகழாண்டு இறுதியில் பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில், இவ்வளவு தாமதமாக இந்தப் பணியை மேற்கொள்வது ஏன்? பல மாதங்களுக்கு முன்பே இதை நடத்தியிருக்க முடியும். மேலும், குடியுரிமையை நிரூபிக்க தோ்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ள ஆவணங்களை 2 அல்லது 3 சதவீத வாக்காளா்கள் மட்டுமே வைத்திருக்க வாய்ப்புள்ளது. போலி வாக்காளா்கள் குறித்த அச்சம் எதற்கு? இந்த போலி வாக்காளா்கள்தான் நரேந்திர மோடியை பிரதமராகவும், நிதீஷ் குமாரை பிகாா் முதல்வராகவும் ஆக்கினாா்கள் என்பதை இதன் மூலம் தோ்தல் ஆணையம் சுட்டிக்காட்ட முற்படுகிா?