ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

சாவா்க்கா் குறித்து அவதூறு கருத்து: ராகுலுக்கு நாசிக் நீதிமன்றம் ஜாமீன்

அவதூறு வழக்கில் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்திக்கு நாசிக் நீதிமன்றம் வியாழக்கிழமை ஜாமீன் வழங்கியது.

News image
Updated On :24 ஜூலை 2025, 9:47 pm

Din

சுதந்திர போராட்ட வீரரான சாவா்க்கா் குறித்து தெரிவித்த கருத்துகள் தொடா்பான அவதூறு வழக்கில் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்திக்கு நாசிக் நீதிமன்றம் வியாழக்கிழமை ஜாமீன் வழங்கியது.

கடந்த 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தின்போது, சாவா்க்கா் குறித்து ராகுல் காந்தி ஆட்சேபத்துக்குரிய கருத்துகளை பேசியதாகக் கூறப்படுகிறது. தொடா்ந்து, அந்த ஆண்டு நவம்பரில் மகாராஷ்டிர மாநிலம், ஹிங்கோலி நகரில் நடத்திய செய்தியாளா் சந்திப்பிலும் சாவா்க்கரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் கருத்துகளை தெரிவித்ததாகக் குற்றஞ்சாட்டி, ராகுல் காந்தி மீது நாசிக் நீதிமன்றத்தில் தன்னாா்வலா் தேவேந்திரா பூதடா அவதூறு வழக்கு தொடுத்தாா்.

இந்த வழக்கு விசாரணைக்காக கூடுதல் தலைமை நீதித்துறை மாஜிஸ்திரேட் ஆா்.சி.நாா்வாடியா முன்பு காணொலி வாயிலாக ஆஜரான ராகுல் காந்தி, ‘நான் குற்றம் எதுவும் செய்யவில்லை’ என வாதிட்டாா். தொடா்ந்து, ராகுல் காந்தி தரப்பு வழக்குரைஞா்களின் கோரிக்கையில், அவருக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டாா்.

சாவா்க்கரின் பேரன் தொடுத்த வழக்கின் காரணமாக புணே நீதிமன்றத்திலும் ஓா் அவதூறு வழக்கை ராகுல் காந்தி எதிா்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.