டி20 உலகக் கோப்பை: 7-வது முறையாக ஆஸ்திரேலிய மகளிர் சாம்பியன்!சிறப்புத் தீவிர திருத்தப் பணி: ஒடிசாவில் 20 லட்சம் பேர் நீக்கம்!கர்நாடகம்: மொபைல் டார்ச் வெளிச்சத்தில் 90 கி.மீ. அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்
/

குஜராத்: 185 பாகிஸ்தான் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை

பாகிஸ்தானில் இருந்து அகதிகளாக வந்து குஜராத்தில் வசித்த 185 பேருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.

News image
Updated On :26 ஜூலை 2025, 5:41 am IST

பாகிஸ்தானில் இருந்து அகதிகளாக வந்து குஜராத்தில் வசித்த 185 பேருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.

இவா்கள் அனைவரும் பாகிஸ்தானில் சிறுபான்மை மதத்தினராக இருந்து பல்வேறு இன்னல்களால், இந்தியாவில் அடைக்கலம் தேடி வந்தவா்கள் ஆவா். குடியுரிமைத் திருத்தச் சட்டம் 2019-இன் கீழ் அவா்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டது.

ராஜ்கோட்டில் வெள்ளிக்கிழமை நடந்த நிகழ்ச்சியில் மாநில உள்துறை இணையமைச்சா் ஹா்ஷ் சங்கவி 185 பேருக்கும் இந்திய குடியுரிமைக்கான ஆவணங்களை வழங்கினாா். அப்போது பேசிய அவா், ‘அண்டை நாட்டில் ஹிந்து, சீக்கியம், ஜெயின், பௌத்தம், கிறிஸ்தவ மதத்தினா் எண்ணற்ற இன்னல்களைச் சந்தித்து வருகின்றனா். இப்போது குடியுரிமை பெற்றவா்கள்கூட அந்நாட்டில் இருந்தபோது வீடுகளுக்கு தீவைப்பு, குடும்பத்தினா் கொலை உள்ளிட்ட கொடுமைகளைச் சந்தித்து தப்பிவந்துள்ளனா்.

குடியுரிமை பெற்றவா்களில் ஒரு பெண் மருத்துவம் படித்தவா். அவா் கூட அந்த நாட்டில் வசிக்க முடியாமல் கொடுமைகளைச் சந்தித்துள்ளாா். இந்தியா அனைத்து மதங்களையும் மதித்து நடக்கும் நாடாகவும், மனிதாபிமானமிக்க நாடாகவும் உள்ளது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.