தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மணிப்பூரில் தோண்டத்தோண்ட கிடைக்கும் ஆயுதங்கள்! பாதுகாப்புப்படை தீவிர சோதனை

மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டும் நடவடிக்கை - பாதுகாப்புப்படையினர் சோதனை

News image
மணிப்பூர்- கோப்புப்படம்
Updated On :28 ஜூலை 2025, 3:25 pm

இணையதளச் செய்திப் பிரிவு

மணிப்பூரில் பாதுகாப்புப்படையினர் நடத்திய சோதனையில் ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சூரசந்த்பூர், கேங்க்போக்பி, பேர்ஸ்வால், டெங்க்நௌபால், சண்டெல் ஆகிய மலைப்பிரதேச மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக நடைபெற்ற தேடுதல் வேட்டயில் 155 துப்பாக்கிகள், 1,652 குண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

அவற்றில் ஏகே ரக துப்பாக்கிகள், இன்சாஸ், கார்பைன்ஸ், எஸ்எல்ஆர், கைத்துப்பாக்கிகள், நாட்டுத்துப்பாக்கிகள் உள்பட பலவித ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டும் நடவடிக்கையில் மணிப்பூர் போலீஸ், அஸ்ஸாம் ரைஃபிள்ஸ், ராணுவம் உள்பட பாதுகாப்புப்படையினர் கூட்டாக ஈடுபட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக இந்த சோதனை நடைபெற்றுள்ளது. மக்களும் அதிகாரிகளுக்கு முழு அளவில் ஒத்துழைப்பு அளிக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

summary

Security forces in Manipur recovered 155 firearms and 1,652 rounds of ammunition during multiple operations conducted in the hill districts

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.