கிராமப்புற சுகாதாரப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை உயர்வு: நிதிஷ் குமார் அறிவிப்பு!

கிராமப்புற சுகாதாரப் பணியாளர்களுக்கான ஊக்கத்தொகையை உயர்த்தியது பிகார் அரசு..
Bihar govt announces hike
முதல்வர் நிதிஷ் குமார்
Published on
Updated on
1 min read

பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், கிராமப்புற சுகாதாரப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகையை உயர்த்தியுள்ளதாக அந்த மாநில முதல்வர் நிதிஷ் குமார் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நிதிஷ் குமார் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,

2025இல் அரசு அமைக்கப்பட்டதிலிருந்து சுகாதார சேவைகளை மேம்படுத்த நாங்கள் விரிவாகப் பணியாற்றி வருகிறோம்.

அங்கீகாரம் பெற்ற சமூக சுகாதார ஆர்வலர்கள் (ASHA) மற்றும் மம்தா பணியாளர்கள் கிராமப்புறங்களில் சுகாதார சேவைகளை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்கப் பங்கைக் கெண்டுள்ளனர்.

ஆஷா பணியாளர்களுக்கு தற்போது வழங்கப்படும் ரூ. 1,000-க்கு பதிலாக ரூ. 3,000 ஊக்கத்தொகை வழங்கப்படும்.

மம்தா ஊழியர்களுக்கு பிரசவத்திற்கு ரூ. 300 ஊக்கத்தொகை வழங்கப்பட்ட நிலையில், தற்போது ரூ. 600 ஆக அதிகரித்துள்ளது.

முதல்வரின் அறிவிப்புக்குப் பதிலளித்த ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ், மாநில சுகாதார அமைச்சராகத் தனது 17 மாத பதவிக்காலத்தில்ஆஷா மற்றும் மம்தா தொழிலாளர்களுக்கான ஊக்கத்தொகையை அதிகரிக்கும் செயல்முறையைத் தொடங்கியதாக அவர் கூறினார்.

இந்த மேம்படுத்தப்பட்ட ஊக்கத்தொகை அவர்களின் மன உறுதியை அதிகரிக்கும் மற்றும் கிராமப்புறங்களில் சுகாதார சேவைகளை வலுப்படுத்தும் என்று அவர் கூறினார்.

கிராமப்புறங்களில் சுகாதார சேவைகளை வலுப்படுத்த ஆஷா மற்றும் மம்தா ஊழியர்களின் பங்களிப்புகளைக் கருத்தில் கொண்டு அவர்களின் ஊக்கத்தொகையை அதிகரிக்கும் முடிவு எடுக்கப்பட்டது.

ஆஷா பணியாளர்கள் தேசிய கிராமப்புற சுகாதார மிஷன் பிரிமிட்டின் கீழ் உள்ளனர். கிராமப்புற மக்களுக்குப் பயனுள்ள மருத்துவ சேவைகளை வழங்குவதற்காக, ஒவ்வொரு ஆயிரம் பேருக்கும் ஒரு பெண் சுகாதாரப் பணியாளர்களை நியமிக்க முன்மொழிந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அரசு மருத்துவமனைகளின் மகப்பேறு மையத்தில் புதிதாகப் பிறந்த குழந்தைகளையும் அவர்களின் தாய்மார்களையும் கவனித்துக்கொள்வதற்காக மம்தா தொழிலாளர்கள் ஒப்பந்த சுகாதார பணியாளர்களாக உள்ளனர் என்று அவர் கூறினார்.

Summary

Ahead of the Bihar assembly elections, Chief Minister Nitish Kumar on Wednesday announced that ASHA workers in the state will now get Rs 3,000 per month as an incentive, a substantial increase from the existing amount of Rs 1,000.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com