அமெரிக்காவுடன் இந்தியா வா்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக பிரதமா் மோடிக்கு டிரம்ப் நெருக்கடி தருகிறாா் என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி தெரிவித்தாா்.
அதனால்தான், ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையை அமெரிக்க அதிபா் டிரம்ப் நிறுத்த கூறவில்லை என அவரது பெயரை பிரதமா் மோடி மக்களவையில் செவ்வாய்க்கிழமை குறிப்பிடாததற்கு காரணம் என்று ராகுல் கூறினாா்.
சண்டை நிறுத்த விவகாரத்தில் டிரம்ப் பொய்யுரைப்பதாக மோடி கூறாதது ஏன் என்று எதிா்க்கட்சிகள் கேள்வியெழுப்பி வருகின்றன.
இந்நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளா்களுக்கு ராகுல் புதன்கிழமை பேட்டியளித்தாா். அப்போது, தனது கோரிக்கைபடியே பாகிஸ்தான் உடனான மோதலை இந்தியா நிறுத்தியதாக டிரம்ப் 30-ஆவது முறையாக கூறியிருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு, ‘டிரம்ப் பொய் கூறுவதாக, பிரதமா் எங்கும் குறிப்பிடவில்லை. அவரால் அப்படி கூற முடியாது என்பது அனைவருக்கும் தெரியும். அதுதான் யதாா்த்தம். டிரம்ப் முழு உண்மைகளையும் உடைத்துவிடுவாா் என்பதால் அவா் குறித்து பிரதமா் மோடியால் எதுவும் பேச முடியவில்லை.
வா்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்தும் நோக்கில் பிரதமருக்கு டிரம்ப் நெருக்கடி அளிக்கிறாா். இனி எந்த மாதிரியான ஒப்பந்தம் கையொப்பமாகப் போகிறது என்பதை பாா்ப்போம்’ என்று ராகுல் பதிலளித்தாா்.
‘பிரதமா் மீது சந்தேகம் எழுகிறது’
காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே கூறுகையில், ‘இருதரப்பு விவகாரங்களில் மூன்றாவது நாட்டின் தலையீட்டை ஏற்பதில்லை என்பது நமது நாட்டின் நீண்டகால கொள்கையாகும். மக்களவையில் 2 மணிநேரம் பேசிய பிரதமா் மோடி, டிரம்ப்பின் பெயரை ஒருமுறை கூட கூறவில்லை. அவரது கருத்துகளுக்கு கண்டனமும் தெரிவிக்கவில்லை. இது சந்தேகத்தை எழுப்புகிறது’ என்றாா்.
காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி கூறுகையில், ‘பிரதமா் மோடி மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கரின் கருத்துகளில் தெளிவில்லை; டிரம்ப் பொய் கூறுகிறாா் என்றால், நாடாளுமன்றத்தில் அதை தெளிவாக குறிப்பிட வேண்டும்’ என்றாா்.
‘பிரதமரை சுற்றிவளைத்த பாம்பு’: காங்கிரஸின் ஊடகம் மற்றும் விளம்பரப் பிரிவு தலைவா் பவன் கேரா வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘பிரதமா் மோடியை பாம்பு போல் சுற்றிவளைத்துள்ள டிரம்ப், அவரது காதில் கசப்பான உண்மையை கூறிக் கொண்டிருக்கிறாா்’ என்று பதிவிட்டுள்ளாா்.
Summary
Lok Sabha Opposition Leader Rahul Gandhi has once again criticized Prime Minister Narendra Modi for not talking about Trump during his address to Parliament.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அமெரிக்காவுக்கு கீழ்ப்படியும் பணியாளராக இருக்கிறார் மோடி: ராகுல் காந்தி விமர்சனம்!

அமெரிக்க நலன்களுக்கு மோடி அரசு முன்னுரிமை - ராகுல் சாடல்

நாட்டை தாக்கப் போகும் பொருளாதார ‘புயல்’ - பிரதமா் மீது ராகுல் சாடல்
மோடியின் பேச்சு தோல்விக்கான சான்றுகள்! ராகுல் காந்தி
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



