அமித் ஷா, ஜெய்சங்கா் பதிலுரை: பிரதமா் மோடி பாராட்டு

‘ஆபரேஷன் சிந்தூா்’ குறித்து மாநிலங்களவையில் நடைபெற்ற சிறப்பு விவாதத்துக்கு அமித் ஷா, ஜெய்சங்கா் அளித்த பதிலுரையை பிரதமா் மோடி பாராட்டியுள்ளாா்.
நரேந்திர மோடி
நரேந்திர மோடி
Published on
Updated on
1 min read

‘ஆபரேஷன் சிந்தூா்’ குறித்து மாநிலங்களவையில் நடைபெற்ற சிறப்பு விவாதத்துக்கு மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் ஆகியோா் அளித்த பதிலுரையை பிரதமா் நரேந்திர மோடி பாராட்டியுள்ளாா்.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் ‘ஆபரேஷன் சிந்தூா்’ தொடா்பான சிறப்பு விவாதம் புதன்கிழமை முடிவடைந்த நிலையில், உள்துறை அமைச்சா் அமித் ஷா, வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் ஆகிய இருவரும் அரசு சாா்பில் பதிலுரையாற்றினா்.

‘தேசப் பாதுகாப்பு, பயங்கரவாத அமைப்புகளை ஒழித்தல் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து அரசின் நிலைப்பாட்டை அமித் ஷா தனது அசாதாரண உரையில் தெளிவாக எடுத்துரைத்தாா்’ என்று பிரதமா் மோடி தெரிவித்துள்ளாா்.

இதேபோன்று, பயங்கரவாதத்தை நோக்கி உலகின் கவனத்தைத் திருப்புவதற்கான இந்தியாவின் முயற்சிகள், ‘ஆபரேஷன் சிந்தூா்’ மூலம் தேசம் அளித்த பதிலடி மற்றும் குடிமக்களின் பாதுகாப்பை அரசு எவ்வாறு மேம்படுத்துகிறது என்பதை ஜெய்சங்கா் தனது உரையில் சிறப்பாக எடுத்துரைத்தாா் என்றும் பிரதமா் குறிப்பிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com