வங்கி சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லாத வாடிக்கையாளர்களுக்கு எந்த அபராதமும் விதிக்கப்படாது என கனரா வங்கி அறிவித்துள்ளது.
இந்தியாவின் பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள் என அனைத்து வங்கிகளிலும் குறைந்தபட்ச இருப்புத் தொகையை வாடிக்கையாளர்கள் கணக்குகளில் வைத்திருப்பது கட்டாயம். குறைந்தபட்ச இருப்புத் தொகையானது வங்கி கணக்கின் தன்மை மற்றும் வங்கி இயங்கும் பகுதியை பொறுத்து ரூ. 1,000 முதல் நிர்ணயிக்கப்படுகிறது.
கனரா வங்கி வாடிக்கையாளர்களை பொறுத்தவரை தங்கள் சேமிப்புக் கணக்குகளில் நகர்ப்புறக் கிளைகளில் ரூ.2,000, நகரக் கிளைகளில் ரூ.1,000, கிராமப்புறக் கிளைகளில் ரூ.500 குறைந்தபட்ச இருப்புத் தொகையாக பராமரிக்க வேண்டும் என்ற விதி இருந்தது. இந்த தொகையை பராமரிக்கத் தவறிய வாடிக்கையாளர்களுக்கு அபராதக் கட்டணங்கள் விதிக்கப்பட்டு வந்தன.
இந்த நிலையில் ஜூன் 1, 2025 முதல், குறைந்தபட்ச இருப்பைப் பராமரிக்காத வாடிக்கையாளர்களுக்கு எந்த அபராதமும் விதிக்கப்படாது என கனரா வங்கி அறிவித்துள்ளது. இந்த புதிய விதி அனைத்து சேமிப்பு வங்கி கணக்கு வைத்திருப்பவர்களுக்கும் பொருந்தும் என்று அந்த வங்கி தெரிவித்துள்ளது.
இந்தியாவின் பொதுத்துறை வங்கியான கனரா வங்கியின் இந்த அறிவிப்பு வங்கி வாடிக்கையாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஜார்க்கண்ட்: துப்பாக்கி முனையில் வங்கி கொள்ளையில் ஈடுபட்ட 3 பேர் கைது; தங்கம், பணம் மீட்பு
வங்கியில் பணம் எடுக்க எலும்புக் கூடுடன் சென்ற பழங்குடி நபரால் பரபரப்பு

யூகோ வங்கியின் லாபம் 23% உயர்வு!

பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

