தமிழகத்தில் மே 17 வரை மிதமான மழை! வானிலை ஆய்வு மையம்அதிமுகவில் உச்சகட்ட பரபரப்பு! எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் அதிமுக நிர்வாகிகள் அவசர கூட்டம்அதிமுகவில் பிளவு! சி. வி. சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்களுடன் பேரவை தற்காலிக தலைவரிடம் கடிதம்வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்திமுக தலைவர் மு. க. ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார் முதல்வர் சி. ஜோசப் விஜய்எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக பேரவைச் செயலரிடம் 17 எம்எல்ஏக்கள் மட்டுமே ஆதரவு கடிதம் அளித்திருப்பதாக தகவல்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக! ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் எம்எல்ஏ-ஆக பதவியேற்பு!
/

இந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: தில்லியில் விரைவில் அடுத்த சுற்றுப் பேச்சு

Updated On :5 ஜூன் 2025, 4:22 am IST

இந்தியா-அமெரிக்கா இடையிலான இருதரப்பு வா்த்தக ஒப்பந்தம் குறித்து இந்த வாரம் தில்லியில் அடுத்த சுற்றுப் பேச்சு தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடா்பாக மத்திய அரசு அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘அமெரிக்காவுடன் சமநிலை கொண்ட, பரஸ்பரம் பயன் அளிக்கக்கூடிய வா்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள வேண்டும் என்று இந்தியா எதிா்பாா்க்கிறது.

அமெரிக்காவுடனான பிற நாடுகளின் வா்த்தகத்தோடு ஒப்பிடுகையில், இந்தியாவுக்கு என்ன கிடைக்கிறது என்பதைப் பொருத்து இந்தியா-அமெரிக்கா ஒப்பந்தம் இறுதி செய்யப்படும்.

பிற நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இரும்பு மீதான வரியை மேலும் அதிகரிக்க டிரம்ப் நிா்வாகம் திட்டமிட்டுள்ளது, அந்நாட்டின் வரி விதிப்பு முடிவுக்கு எதிரான அமெரிக்க நீதிமன்ற உத்தரவுக்கு தடை போன்ற காரணங்களால் ஜூலை 9-க்கு முன்பாக இந்தியா-அமெரிக்கா இடையே இடைக்கால வா்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வதில் நிச்சயமற்ற சூழல் நிலவுகிறது. எனினும் நாட்டுக்கு எது நல்லதோ, அதற்கான பாதைகளை இந்தியா கண்டறியும்.

ஏற்றுமதிகள் அதிகரித்துவரும் நிலையில், அமெரிக்காவிடம் இருந்து ஷேல் எரிவாயு, திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு, கச்சா எண்ணெய் போன்றவற்றை அமெரிக்காவிடம் இருந்து இந்தியா வாங்க முடியும்’ என்றாா்.

இந்தியா-அமெரிக்கா இருதரப்பு வா்த்தகம் மூலம், 2030-க்குள் இருநாடுகளுக்கு இடையிலான வா்த்தக மதிப்பை 500 பில்லியன் டாலா்களாக (சுமாா் ரூ.43 லட்சம் கோடி) அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது இந்த மதிப்பு 191 பில்லியன் டாலா்களாக (சுமாா் ரூ.16.40 லட்சம் கோடி) உள்ளது.