நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கரோனா பரவல்: கர்நாடகத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

கர்நாடகத்தில் கரோனா பாதிப்பினால் பலியானவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :5 ஜூன் 2025, 4:00 pm

DIN

கர்நாடக மாநிலத்தில் கரோனா பாதிப்பினால் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில், கரோனா பரவல் வேகமெடுத்துள்ள நிலையில், நாள்தோறும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில், கர்நாடகத்தில் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 65 வயதுடைய நபர் ஒருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதன்மூலம், அம்மாநிலத்தில் கரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கர்நாடகத்தில் கரோனா பாதிப்புக்கு தற்போது 65 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 644 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில், 566 ஆர்டிபிசிஆர் பரிசோதனைகள் எனவும், 78 ஆர்ஏடி பரிசோதனைகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.