குஜராத் உயர்நீதிமன்றத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து வளாகம் முழுவதும் சோதனை மேற்கொண்டனர்.
சமீப காலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுவது தொடர் கதையாகி வருகின்றது. பள்ளிகள், கல்வி நிறுவனங்கள், உயர்நீதிமன்றங்கள் என பல்வேறு மாநிலங்களில் இது தொடர்ந்து வருகின்றது.
அந்தவகையில், குஜராத் உயர்நீதிமன்றத்திற்கு இன்று காலை சுமார் 11.45 மணியளவில் மின்னஞ்சல் ஒன்று வந்தது. அதில் நீதிமன்ற கட்டடத்தில் மேம்படுத்தப்பட்ட வெடிகுண்டு வைக்கப்பட்டதாகவும், இன்று மாலை வெடிக்கக்கூடும் என்று எச்சரித்துள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக மண்டலம் 1-இன் பொறுப்பு துணை காவல் ஆணையர் சஃபின் ஹாசன் தெரிவித்தார்.
மேலும் சம்பவ இடத்துடக்கு உள்ளூர் காவலர்கள் உள்பட ஆறு குழுக்கள் இணைந்து சோதனை மேற்கொண்டனர். இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, அகமதாபாத்தில் உள்ள சர்கேஜ்-காந்தி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள வளாகத்தில், அனைத்து நீதிமன்ற கட்டடங்கள், அறைகள், நிறுத்தப்பட்டிருந்த மற்றும் உள்ளே வந்த கார்கள் உள்பட போலீஸார் முழுமையான சோதனை நடத்தினர்.
சோதனைக்குப் பிறகு வளாகத்தில் சந்தேகத்திற்கிடமான எந்த பொருளும் இல்லை என்பது கண்டுபிடிக்கப்படவில்லை என்று அவர் கூறினார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி திங்களன்று நீதிமன்றத்தின் இரண்டாவது அமர்வை ரத்து செய்ததாக துணை காவல் ஆணையர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

புதுக்கோட்டை ஆட்சியரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

விழுப்புரம், கடலூா் ஆட்சியரகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை


