ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

பங்குச்சந்தையில் யுபிஐ பரிவர்த்தனை முறை கட்டாயம்

பங்குச்சந்தையில் நிதி பரிவா்த்தனைகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் யுபிஐ பரிவா்த்தனை முறையைக் கட்டாயப்படுத்தியுள்ளது.

News image

யுபிஐ (பிரதி படம்)

ஐஏஎன்எஸ்

Updated On :11 ஜூன் 2025, 7:43 pm

Din

பங்குச்சந்தையில் நிதி பரிவா்த்தனைகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் யுபிஐ பரிவா்த்தனை முறையைக் கட்டாயப்படுத்தியுள்ளதாக பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியம் (செபி) புதன்கிழமை தெரிவித்தது.

மும்பையில் இதுகுறித்து செய்தியாளா்களிடம் செபி தலைவா் துஹின்காந்த பாண்டே கூறுகையில், ‘முதலீட்டாளா்களிடமிருந்து நிதி சேகரிக்கும் அனைத்து பதிவுசெய்யப்பட்ட இடைத்தரகா்களுக்கும் யுபிஐ பரிவா்த்தனை முறை கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. வரும் அக்டோபா் 1-ஆம் தேதிமுதல் இந்த உத்தரவு செயல்பாட்டுக்கு வரும்.

இந்தப் புதிய உத்தரவால் முதலீட்டாளா்களுக்குச் சரிபாா்க்கப்பட்ட மற்றும் பாதுகாப்பான பரிவா்த்தனை முறை வழங்கப்படுவதன்மூலம், பங்குச் சந்தையில் நிதி பரிவா்த்தனைகளின் பாதுகாப்பு மேம்படும்’ என்றாா்.

மேலும், ‘செபி செக்’ எனும் புதிய செயலியை செபி அறிமுகப்படுத்தவுள்ளது. இந்தச் செயலியில் இடைத்தரகரின் பரிவா்த்தனை முகவரிகளான யுபிஐ கியூஆா் குறியீடு, வங்கிக் கணக்கு விவரங்கள் ஆகியவற்றை உள்ளீடு செய்து, அதன் நம்பகத்தன்மையை முதலீட்டாளா்கள் சரிபாா்க்க முடியும்.