ஜூனில் சில்லறை விலை பணவீக்கம் 4.38 சதவீதமாக உயர்வு!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 27 காசுகள் சரிந்து ரூ. 95.65 ஆக நிறைவு!மீட்சிக்குப் பிறகு சென்செக்ஸ், நிஃப்டி மாற்றமின்றி நிறைவு!!தில்லியில் ஞானபீட விருது பெற்றார் வைரமுத்து!முட்டை கொள்முதல் விலை ரூ. 6.70-ஆக நிர்ணயம்.லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் ஏ. அருண், சென்னை காவலர் பயிற்சி மைய இயக்குநராகப் பணியிட மாற்றம்பட்ஜெட்: ஜூலை 16 -ல் தமிழக அமைச்சரவை கூட்டம்!தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் கழகத்தின் தலைவராக லயோலா மணி நியமனம்!பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்!மேற்கு வங்க இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்! முதல்வர் விஜய்யுடன் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும தலைவர் மனோஜ் குமார் சொந்தாலியா சந்திப்பு! திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது நில அபகரிப்பு வழக்குசென்னையில் தரையிறங்கிய விமானம் மீது பறவை மோதியது!எழுத்தாளர் பூமணி உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு! 7,700 பக்தர்கள் அடங்கிய 12-வது குழு அமர்நாத் புறப்பட்டது!
/

பஞ்சாபில் அம்பேத்கர் சிலை உடைப்பு! காலிஸ்தான் ஆதரவாளர் மீது வழக்கு!

பஞ்சாபில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதைப் பற்றி...

News image

அம்பேத்கர் சிலை - (கோப்புப் படம்)

Updated On :11 ஜூன் 2025, 5:06 pm IST

பஞ்சாபில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்ட விவகாரத்தில் காலிஸ்தான் ஆதரவாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஹோஷியார்பூர் மாவட்டத்திலுள்ள நூர்பூர் ஜட்டான் என்ற கிராமத்தில் பக்‌ஷிராம் என்பவரது குடும்பத்துக்குச் சொந்தமான இடத்தில், அம்பேத்கரின் சிலை ஒன்று அமைக்கப்பட்டு, உள்ளூர்வாசிகளால் பராமரிக்கப்பட்டு வந்தது.

சமீபத்தில், அந்தச் சிலையின் கைகள் உடைத்து சேதமாக்கப்பட்டன. மேலும், இந்தச் சம்பவம் பதிவு செய்யப்பட்ட விடியோ ஒன்று இணையத்தில் பகிரப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, இந்திய அம்பேத்கர் சேனையின் பொதுச் செயலாளர் குல்வாந்த் சிங் பூனோ என்பவர் மஹில்பூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

இந்நிலையில், அம்பேத்கரின் சிலை உடைக்கப்பட்டதற்கு தடைசெய்யப்பட்ட காலிஸ்தான் அமைப்பின் ஆதரவாளரான குர்பட்வாந்த் சிங் பன்னுன் என்பவர் பொறுப்பேற்றுள்ளார். இவரது தூண்டுதலினால், அவரது கூட்டாளிகள் சிலர் சிலையை உடைத்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து, ஹோஷியாபூர் காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், குல்வாந்த் சிங் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் 298 (வழிபாட்டுத் தலத்தை அசுத்தப்படுத்தல் அல்லது தாக்குதல்) மற்றும் 61(2) (குற்றவியல் சதி) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இந்தத் தாக்குதலுக்கு, கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துள்ள பகுஜன் சமாஜ் கட்சியின் பஞ்சாப் மாநில தலைவர் அவ்தார் சிங் கரிம்புரி, அம்மாநிலத்திலுள்ள அம்பேத்கர் சிலைகளுக்கு அரசு பாதுகாப்பு வழங்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

முன்னதாக, கடந்த சில நாள்களாக பஞ்சாப் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் அம்பேத்கரின் சிலைகள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.