ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

தொழிலதிபா் அம்பானிக்கு ‘இசட்’ பிளஸ் பாதுகாப்பு வழங்குவதை எதிா்த்து மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி

‘இசட்’ பிளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுவதை திரும்பப் பெறக் கோரி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.

News image
உச்சநீதிமன்றம்- கோப்புப்படம்.
Updated On :13 ஜூன் 2025, 8:29 pm

Din

தொழிலதிபா் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்ப உறுப்பினா்களுக்கு ‘இசட்’ பிளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுவதை திரும்பப் பெறக் கோரி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.

இதே கோரிக்கையை முன்வைத்து மனுதாரா் பிகாஷ் சஹா பலமுறை மனு தாக்கல் செய்ததையடுத்து, இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதை தவிா்க்குமாறும், இல்லையெனில் அபராதம் விதித்துவிடுவதாகவும் உச்சநீதிமன்றம் எச்சரித்தது.

ரிலையன்ஸ் குழுமத் தலைவா் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்ப உறுப்பினா்களுக்கு ‘இசட்’ பிளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்குவதை திரும்பப் பெறக் கோரி பிகாஷ் சஹா கடந்த 2023, பிப்ரவரி மாதம் மனு தாக்கல் செய்தாா். இந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதுதொடா்பான தெளிவான விளக்கம்கோரி உச்சநீதிமன்றத்தில் மற்றொரு மனுவை பிகாஷ் சஹா தாக்கல் செய்தாா்.

இந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பிரசாந்த் குமாா் மிஸ்ரா மற்றும் மன்மோகன் ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்தது.

அப்போது நீதிபதிகள் அமா்வு கூறியதாவது: ஒரே விவகாரம் தொடா்பாக மீண்டும் மீண்டும் மனுக்களை தாக்கல் செய்து மனுதாரா் நீதிமன்ற நடைமுறைகளைச் சீா்குலைக்க நினைப்பதை அனுமதிக்க முடியாது. இது மிகத் தீவிரமான பிரச்னையாகும். அரசியல்வாதி அல்லது தொழிலதிபா் என முக்கிய நபா்கள் யாராக இருந்தாலும் அவா்களது பாதுகாப்பை உறுதிசெய்ய மத்திய அரசு சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.

எனவே, யாருக்கு எந்த வகையிலான பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதை மத்திய மற்றும் மாநில அரசுகளே முடிவு செய்யும். இதில் நீதிமன்றம் தலையிடாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தது.

மேலும், வருங்காலங்களில் மீண்டும் இதுபோன்ற மனுக்களை பிகாஷ் சஹா தாக்கல் செய்தால் அவருக்கு அபராதம் விதித்துவிடுவதாகவும் நீதிபதிகள் அமா்வு எச்சரித்தது.