டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

இஸ்ரேல் - ஈரான் சண்டையால் பெட்ரோல் தட்டுப்பாடு வருமா?

இஸ்ரேல் - ஈரான் சண்டையால் பெட்ரோல் தட்டுப்பாடு வருமா என்பது பற்றி

News image
இஸ்ரேல் - ஈரான் ஏவுகணைத் தாக்குதல்- AP
Updated On :17 ஜூன் 2025, 1:14 pm

DIN

மேற்கு ஆசிய நாடுகளான இஸ்ரேல் - ஈரான் சண்டையால், தற்போதைக்கு எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இல்லை என்று மத்திய அரசுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சர்வதேச சந்தையில், எரிபொருள் தேவைக்கு அதிகமாகவே இருப்பில் உள்ளதாகவும், உடனடியாக உலக நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் நிலை இல்லை எனவும் அந்த தகவலறிந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.

எண்ணெய் மற்றும் பெட்ரோலியம் ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பான ஒபெக், நாள் ஒன்றுக்கு 120 மில்லியன் பேரல்களை உற்பத்தி செய்து வருகின்றன. தற்போது, இதில் 5 மில்லியன் பேரல்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் 97 தற்போதும் நாள் ஒன்றுக்கு 97 மில்லியன் பேரல்கள் உற்பத்தியாகின்றன. இவை மட்டுமல்லாமல், ஏராளமான எரிபொருள் வழங்கும் நாடுகள் உள்ளன. அவை தேவைக்கு ஏற்ப எரிபொருளை வழங்கும் திறன் கொண்டிருக்கின்றன.

அது மட்டுமல்லாமல், உலக நாடுகளுக்கு எரிபொருள் வழங்கும் பணியானது, கடல் வழியில் தடையின்றி நடைபெற்று வருகிறது. இந்தியாவுக்கு நாள் ஒன்றுக்கு 5.6 மில்லியன் பேரல்கள் தேவைப்படும் நிலையில், தற்போது போர் நடைபெற்று வரும் பகுதி வழியாக இந்தியாவுக்கு வெறும் 1.5 முதல் 2 மில்லியன் பேரல்கள்தான் வருகின்றன.

மேலும், இந்தியா தனது எரிபொருள் தேவைக்காக 27 நாடுகளிலிருந்து எரிபொருள் வாங்குவதை தற்போது 40 நாடுகள் என்ற அளவுக்கு அதிகரித்துள்ளது. எனவே, நாட்டின் எரிபொருள் தேவை என்பது மிகவும் பாதுகாப்பாகவே உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.