
தெற்கு கோவாவின் பிரதாப் நகரில் உள்ள அடர்ந்த வனப்பகுதியிலிருந்து ஒரு பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அவரது 22 வயது காதலர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருமணம் செய்துகொள்ளும் ஆசையோடு, பெங்களூரிலிருந்து கோவா சென்ற காதலர்களுக்கு இடையே ஏற்பட்ட சண்டை கொலையில் முடிந்திருக்கலாம் என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
கைது செய்யப்பட்டவர் சஞ்சய் கெவின் (22) என்பதும், இவர் கர்நாடக மாநிலம் வடக்கு பெங்களூரைச் சேர்ந்தவர் என்பதும், கொலையான பெண் ரோஷினி மோசஸ் (22) என்பதும், இவரும் அதேப் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்துள்ளது. ரோஷினியைக் கொலை செய்துவிட்டு, சஞ்சய் பெங்களூருக்குத் தப்பிக் சென்றிருக்கிறார்.
காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரிய வந்திருப்பதாவது, திருமணம் செய்துகொள்வதற்காக இருவரும் பெங்களூரிலிலுந்து கோவாவுக்கு அண்மையில் வந்துள்ளனர். ஆனால், ஏதோ ஒரு காரணத்துக்காக இருவருக்கும் இடையே சண்டை வலுத்து, அதில் சஞ்சய், ரோஷினியைக் கொன்று வனப்பகுதியில் உடலை வீசியிருக்கிறார்.
இதையும் படிக்க.. போபாலின் 90 டிகிரி மேம்பாலத்துக்கு டஃப் கொடுக்கும் ஆந்திர மேம்பாலம் இதுதானா?
வனப்பகுதியில், பெண்ணின் உடல் கழுத்தறுபட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட நிலையில், விசாரணை நடத்தியதில், சஞ்சய்தான் கொலையாளி என்பது கண்டுபிடிக்கப்பட்டு, பெங்களூர் சென்ற தனிப்படையினர் அவரைக் கைது செய்திருக்கிறார்கள்.
கொலைக்கான காரணம் பிறகு தெரியவரும் என்று கூறப்படுகிறது.
திருமணம் செய்துகொள்ளும் கனவோடு வந்த காதல் ஜோடிக்கு இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு கொலையில் முடிந்த சம்பவம் பெங்களூரில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.