வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

இந்தியாவில் 295 பெட்டிகள், 6 என்ஜின்களுடன் இயக்கப்படும் மிக நீண்ட ரயில்! உண்மையா?

இந்தியாவில் 295 பெட்டிகள், 6 என்ஜின்களுடன் இயக்கப்படும் மிக நீண்ட ரயில் என்ற பெருமையை பெற்றிருக்கிறது சூப்பர் வாசுகி

News image

நீண்ட ரயில் - பிரதி படம் - PTI

Updated On :21 ஜூன் 2025, 2:15 pm IST

295 பெட்டிகளுடனும், 6 என்ஜின்களுடனும் இந்திய ரயில்வே ஒரு ரயிலை இயக்கி வருகிறது என்றால் நம்ப முடிகிறதா? நாட்டிலேயே மிக நீண்ட ரயில் என்ற பெருமையை இந்த ரயில் பிடித்திருக்கிறது. இதன் பெயர் சூப்பர் வாசுகி.

இந்திய ரயில்வே நாள்தோறும் 13,000 ரயில்களை இயக்கி வருகீறது. இதில் நாள்தோறும் 4 கோடி மக்கள் பயணிக்கிறார்கள்.

சாதாரண புறநகர் ரயில்கள், விரைவு ரயில்கள், வந்தே பாரத் ரயில்கள், சரக்கு ரயில்கள் என இதில் ஏராளம். இவற்றில் மிக நீண்ட ரயில் என்ற பெருமையோடு சப்தமே இல்லாமல் சூப்பர் வாசுகி ரயில் இயக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இந்தியாவில் இயக்கப்படும் மிக நீண்ட சரக்கு ரயில் என்ற பெருமையோடு ஓடிக் கொண்டிருக்கிறது சூப்பர் வாசுகி. இந்த ரயிலே கிட்டத்தட்ட 3.5 கிலோ மீட்டர் தொலைவு இருக்கும். இதில் 295 சரக்குப் பெட்டிகள் இடம்பெற்றுள்ளன. இந்திய ரயில்வேயால் இயக்கப்படும் மிக நீண்ட ரயில் என்ற பெருமையோடு ஓடிக்கொண்டிருக்கிறது.

சிறு வயதில் சரக்கு ரயிலின் பெட்டிகளை எண்ணுவதை சிறுவர்கள் விளையாட்டாக செய்வார்கள். ஆனால், இந்த சரக்கு ரயிலின் பெட்டிகளை எண்ணத் தொடங்கினால் கண்களே களைப்படைந்துவிடும் என்கிறார்கள்.

1ரயில்வேகேட்

Listicle image

295 சரக்குப் பெட்டிகளை இழுத்துச் செல்ல 6 என்ஜின்கள் இணைக்கப்பட்டுள்ளன. ஒரு ரயில்வே கேட் பகுதியைக் கடந்துசெல்ல குறிப்பிட்ட நேரம் ஆகும்.

இந்த ரயில் தனது பயணத்தை முடிக்க 11.20 மணி நேரம் ஆகுமாம். சத்தீஷ்கரிலிருந்து நாக்பூருக்கு இயக்கப்படுகிறது.

227 ஆயிரம் டன் நிலக்கரி

சரக்கு ரயில்

சரக்கு ரயில்

சத்தீஸ்கரின் கொர்பா சுரங்கத்திலிருந்து நாள்தோறும் 27,000 டன் நிலக்கரியை சுமந்து செல்லும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

3வாசுகிப் பெயர்..

சிவபெருமான்

சிவபெருமான்

இதன் மிக நீண்ட வடிவத்துக்காக, சிவபெருமானின் கழுத்தில் இருக்கும் வாசுகிப் பாம்பின் பெயர் இந்த சரக்கு ரயிலுக்கு சூட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.