சேது விரைவு ரயில் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும்!

சேது விரைவு ரயில் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும்.
சேது விரைவு ரயில்
சேது விரைவு ரயில்படம்: தெற்கு ரயில்வே
Updated on
1 min read

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மறுசீரமைப்பு பணிகள் காரணமாக, எழும்பூர் - ராமேஸ்வரம் இடையே இயக்கப்படும் சேது விரைவு ரயில் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதேபோல ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை எழும்பூருக்கு இயக்கப்படும் சேது விரைவு ரயில் தாம்பரம் வரை நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராமேசுவரத்திலிருந்து சென்னை எழும்பூருக்கு இயக்கப்படும் சேது விரைவு ரயில், பிப். 19 ஆம் தேதி முதல் ஏப். 5 ஆம் வரை தாம்பரம் வரை நிறுத்தப்படும் என்றும், தாம்பரத்துக்கு காலை 6.35 மணிக்கு வந்தடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, எழும்பூர் - ராமேஸ்வரம் இடையே இயக்கப்படும் சேது விரைவு ரயில், பிப். 20 ஆம் தேதி முதல் ஏப். 6 ஆம் வரை தாம்பரத்தில் இருந்து புறப்படும். தாம்பரத்தில் இருந்து இரவு 6.25 மணிக்கு புறப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

எனவே, பயணிகள் தங்கள் பயணத்தை இதற்கேற்ப திட்டமிடுமாறு தெற்கு ரயில்வே கேட்டுக் கொண்டுள்ளது.

Summary

Southern Railway has announced that the Sethu Express train operating between Lumbpur - Rameswaram will operate from Tambaram.

சேது விரைவு ரயில்
மீண்டும் மழை! பிப். 21ல் 10 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com