

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மறுசீரமைப்பு பணிகள் காரணமாக, எழும்பூர் - ராமேஸ்வரம் இடையே இயக்கப்படும் சேது விரைவு ரயில் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதேபோல ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை எழும்பூருக்கு இயக்கப்படும் சேது விரைவு ரயில் தாம்பரம் வரை நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமேசுவரத்திலிருந்து சென்னை எழும்பூருக்கு இயக்கப்படும் சேது விரைவு ரயில், பிப். 19 ஆம் தேதி முதல் ஏப். 5 ஆம் வரை தாம்பரம் வரை நிறுத்தப்படும் என்றும், தாம்பரத்துக்கு காலை 6.35 மணிக்கு வந்தடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, எழும்பூர் - ராமேஸ்வரம் இடையே இயக்கப்படும் சேது விரைவு ரயில், பிப். 20 ஆம் தேதி முதல் ஏப். 6 ஆம் வரை தாம்பரத்தில் இருந்து புறப்படும். தாம்பரத்தில் இருந்து இரவு 6.25 மணிக்கு புறப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
எனவே, பயணிகள் தங்கள் பயணத்தை இதற்கேற்ப திட்டமிடுமாறு தெற்கு ரயில்வே கேட்டுக் கொண்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.