ஹிமாசலில் மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல்: ஆசிரியர் கைது!

பாலியல் ரீதியாக மாணவிகளை துன்புறுத்தியதாக ஆசிரியர் ஒரு கைது செய்யப்பட்டுள்ளார்.
Govt school teacher arrested f
அரசுப் பள்ளி ஆசிரியர்
Updated on
1 min read

ஹிமாசலப் பிரதேசத்தின் சிர்மௌர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் 24 மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக ஆசிரியர் ஒரு கைது செய்யப்பட்டுள்ளார்.

அரசுப் பள்ளியில் படிக்கும் எட்டாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள மாணவிகள் பள்ளி முதல்வரிடம் துன்புறுத்தல் குறித்து 24 பேர் எழுத்துப்பூர்வமாகப் புகார் அளித்தனர். ஆசிரியர் தகாத முறையில் தங்களை நடத்தியதாகவும் கூறினார்.

இதையடுத்து அரசுப் பள்ளி முதல்வர் காவல்துறையில் புகார் அளித்தார். அவரின் புகாரையடுத்து ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆசிரியர் மீது பாரதிய நியாய சன்ஹிதாவின் பிரிவு 75 (பாலியல் துன்புறுத்தல்) மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்சோ) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com