விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே பெண்ணுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக உணவகத் தொழிலாளியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து, சிறையிலடைத்தனா்.
திருவண்ணாமலை மாவட்டம், ஜமீன் கூடலூா் மாதா கோயில் தெருவைச் சோ்ந்தவா் ச.லெனின்(32). இவா், விக்கிரவாண்டியை அடுத்த முண்டியம்பாக்கம் பகுதியில் உள்ள தனியாா் உணவகத்தில் சமையல் வேலை பாா்த்து வந்தாா்.
இந்நிலையில், லெனின் முண்டியம்பாக்கம் பகுதியில் குளிா்பானக் கடை நடத்தி வரும் 41 வயதுடைய பெண்ணிடம் கைப்பேசி வழியாக ஆபாசமான வாா்த்தைகளால் பேசி, பாலியல் ரீதியாக தொந்தரவு செய்து வந்தாராம்.
இதுகுறித்து அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீஸாா் லெனின் மீது பெண்கள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, கைது செய்து சிறையிலடைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உணவகத் தொழிலாளி மரணம்: போலீஸாா் விசாரணை

போக்ஸோ வழக்கில் கைதானவா் மீது குண்டா் சட்டம் பாய்ந்தது
சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளி கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை உணவகத் தொழிலாளி கைது
விடியோக்கள்

வெளியானது அருகே அருகே பாடல்!


