எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

விண்வெளி நாயகியாகும் ஆந்திர இளம்பெண்: சர்வதேச விண்வெளி வீராங்கனையாகத் தேர்வு!

ஆந்திர இளம்பெண் சர்வதேச விண்வெளி வீராங்கனையாகத் தேர்வு: 2029-இல் விண்வெளி செல்கிறார்!

News image
ஜானவி தங்கேட்டி - படம்| ஜானவி தங்கேட்டி இன்ஸ்டாகிராம் பதிவு
Updated On :23 ஜூன் 2025, 12:07 pm

DIN

ஆந்திர பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதான பொறியியல் பட்டதாரி ’ஜானவி தங்கேட்டி’ அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனமான ‘டைட்டான் ஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ்(டிஎஸ்ஐ) மேற்கொண்டுவரும் விண்வெளி திட்டத்துக்கு தேர்வாகியுள்ளார். இதனை அவர் தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

மின்னணு மற்றும் தொலைத்தொடர்பு பிரிவு பொறியியல் படிப்பில் இளநிலை பட்டம் பெற்றுள்ள அவர், உரிய பயிற்சிக்குப் பின் 2029-ஆம் ஆண்டு விண்வெளிக்கு செல்வார் என்று திட்டமிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து, ஜானவிக்கு, ஆந்திர அமைச்சரும் அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகனுமான நாரா லோகேஷ் இன்று(ஜூன் 23) வாழ்த்து தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

மேற்கு கோதாவரி மாவட்டத்தின் பாலகொல்லு பகுதியைச் சேர்ந்த ஜானவி, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் ’சர்வதேச வான் மற்றும் விண்வெளி பயிற்சியை’ நிறைவு செய்துள்ள இந்தியாவைச் சேர்ந்த முதல் நபர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரர்.

நாசா விண்வெளி செயலி போட்டியில்(நாசா ஸ்பேஸ் ஆப்ஸ் சேலஞ்ச்) மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் விருதுக்கான பிரிவில் ஜானவி வெற்றி பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நாசாவின் சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு வீரா்களை அழைத்துச் செல்லும் ‘ஆக்ஸியம்-4’ திட்டத்தில் ஒருவராக தேர்வாகியுள்ள இந்திய விண்வெளி வீரா் சுபான்ஷு சுக்லா வெகு விரைவில் விண்வெளி செல்லவுள்ளார். இந்த நிலையில், இந்தியாவைச் சேர்ந்த இன்னொரு நபரும் அடுத்தக்கட்டமாக விண்வெளிக்குச் செல்ல உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.