மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஜம்முவில் கனமழை: ஆற்றில் அடித்துசெல்லப்பட்ட 9 பேர் மீட்பு!

ஆற்றில் வெள்ளப்பெருக்கில் சிக்கிய 9 பேர் பத்திரமாக மீட்பு..

News image
தாவி ஆற்றில் அடித்து செல்லப்பட்டவர்களை மீட்கும் மீட்புக்குழு
Updated On :25 ஜூன் 2025, 9:09 am

DIN

ஜம்மு-காஷ்மீரின் பல பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக தாவி ஆற்றில் வெள்ளப்பெருக்கில் சிக்கிய 9 பேரை காவல்துறை மற்றும் துணைப் பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை 3 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது, அதே நேரத்தில் ரஜௌரி மாவட்டத்தில் உள்ள ஓடையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் இரண்டு வாகனங்களும் அடித்துச் செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மதன் லால் (52) என்ற தொழிலாளி காலை 8.45 மணியளவில் தாவியில் மணல் எடுக்கச் சென்றிருந்தார், ஆனால் நகரின் ஜூவல் சௌக் பாலம் அருகே திடீரென நீர் மட்டம் உயர்ந்ததால் சிக்கிக்கொண்டார். மாநில பேரிடர் மீட்புப் படை பணியாளர்களால் அவர் மீட்கப்பட்டார், சுமார் 2 மணி நேரம் கழித்து மீட்கப்பட்டார்.

மேலும், திதி கொடுக்கச் சென்ற எட்டு பேர் தாவி ஆற்றில் சென்றபோது நீர்மட்டம் திடீரென உயர்ந்தது. அவர்களையும் பேரிடர் மீட்புக்குழுவினர் மீட்டனர். மேலும் பல குதிரைகளும் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கனமழையால் ஏற்பட்ட மண் சரிவுகள், ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் மேஹாத், ராம்பன் பகுதியில் உள்ள சுரங்கப்பாதையில் இருபுறமும் போக்குவரத்து நிறுத்தப்பட்டது என்று போக்குவரத்துத் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

வானிலை ஆய்வு மையத்தின் கூற்றுப்படி, கடந்த 24 மணி நேரத்தில் ரியாசி மாவட்டத்தின் கத்ரா நகரில் அதிகபட்சமாக 108.5 மிமீ மழை பதிவாகியுள்ளது. அதைத் தொடர்ந்து ரஜௌரி (80 மிமீ), உதம்பூர் (71.4 மிமீ), பூஞ்ச் ​​(48 மிமீ) மற்றும் ராம்பன் (47.5 மிமீ) பதிவாகியுள்ளன.

ஜூன் 27 ஆம் தேதி வரை ஜம்மு பிரிவின் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், பல இடங்களில் அவ்வப்போது லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வுமையம் கணித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.