பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

இளைஞரின் தலையில் சிக்கிய 10 கிலோ பால் கேன்! 2 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு அகற்றம்

ராஜஸ்தானில் இளைஞரின் தலையில் சிக்கிய 10 கிலோ பால் கேன் 2 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு அகற்றப்பட்டது.

Rajasthan man trapped with 10 kg milk can on head, rescued after 2-hour ordeal

இளைஞரின் தலையில் சிக்கிய பால் கேன்.

Published On :

ராஜஸ்தானில் இளைஞரின் தலையில் சிக்கிய 10 கிலோ பால் கேன் 2 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு அகற்றப்பட்டது.

ராஜஸ்தானின் மாதோகர் கிராமத்தில் வசித்து வருபவர் கலுராம் ரெபரி. இவர் பண்ணைக்குச் செல்லும் வழியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது தன் கையில் வைத்திருந்த 10 கிலோ காலி பால் கேனை வெயிலில் இருந்து தற்காத்துக்கொள்ள தலையில் கவிழ்த்தி வைத்தபடி சென்றிருக்கிறார்.

ஆனால் அந்த பால் கேன் அவரின் தலையில் மாட்டிக்கொண்டது. பால் கேனை எடுக்க எவ்வளவோ முயற்சி செய்தும் அவரால் முடியவில்லை. இதனால் அவர் சற்று பீதியடைந்தார். இதை அறிந்த கிராமவாசிகள் அவரை உடனடியாக அருகிலுள்ள கிராமத்திற்கு அழைத்துச் சென்றனர்.

அவரை ஒரு குறிப்பிட்ட நிலையில் படுக்கச் சொன்னார்கள். கட்டர் உதவியுடன் கேனின் மேல் பகுதி கவனமாக வெட்டப்பட்டது. பிறகு, கேன் அவரது தலையிலிருந்து அகற்றப்பட்டது. இதற்கு கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் ஆனது. இருப்பினும், இந்தச் சம்பவத்தில் அவர் காயமின்றி தப்பினார்.

அதன்பிறகே அந்த இளைஞர் நிம்மதிப் பெருமூச்சு விட்டார். தற்போது இந்தச் சம்பவத்தின் விடியோ வைரலாகி வருகிறது.

Summary

A bizarre heatwave hack in Rajasthan goes wrong as a Madhogarh villager gets a 10 kg milk can stuck on his head, triggering a tense 2-hour rescue captured on video and widely shared online.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.