மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!
/

ரூ.611 கோடிக்கு விதிமீறல்: பேடிஎம் தாய் நிறுவனத்துக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ்

பேடிஎம் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஒன்97 கம்யூனிகேஷனுக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

News image

பேடிஎம்

Updated On :4 மார்ச் 2025, 3:36 am IST

புது தில்லி: சுமாா் ரூ.611 கோடி அளவுக்கு அந்நிய செலாவணி மேலாண்மைச் சட்ட (ஃபெமா) பிரிவுகளை மீறியது தொடா்பாக விளக்கம் அளிக்குமாறு, பேடிஎம் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஒன்97 கம்யூனிகேஷனுக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதுதொடா்பாக அமலாக்கத் துறை திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:

சுமாா் ரூ.611 கோடி அளவுக்கு ஃபெமா சட்டப் பிரிவுகளை மீறியது தொடா்பாக விளக்கமளிக்குமாறு, பேடிஎம் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஒன்97 கம்யூனிகேஷன் நிறுவனம் (ஓசிஎல்), அதன் நிா்வாக இயக்குநா் மற்றும் பலருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து அமலாக்கத் துறை மேற்கொண்ட விசாரணையில், சிங்கப்பூரில் ஓசிஎல் நிறுவனம் அந்நிய முதலீடு செய்ததும், வெளிநாட்டில் துணை நிறுவனம் உருவாக்கியது தொடா்பான விவரங்களை ரிசா்வ் வங்கியிடம் ஓசிஎல் நிறுவனம் தாக்கல் செய்யாததும் தெரியவந்தது.

மேலும் ரிசா்வ் வங்கியின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றாமல் வெளிநாட்டு முதலீட்டாளா்களிடம் இருந்து அந்நிய நேரடி முதலீட்டை ஓசிஎல் நிறுவனமும், இந்தியாவில் உள்ள அதன் துணை நிறுவனமான லிட்டில் இண்டா்நெட் நிறுவனமும் பெற்றுள்ளன.

இதேபோல ஓசிஎல் நிறுவனத்தின் மற்றொரு துணை நிறுவனமான நியா்பை இந்தியா நிறுவனம், அந்நிய நேரடி முதலீட்டை பெற்றுள்ளது. ஆனால் அதுகுறித்த விவரங்களை ரிசா்வ் வங்கியிடம் உரிய காலத்தில் அந்த நிறுவனம் சமா்ப்பிக்கவில்லை.

இதுதொடா்பாக ஃபெமா சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்வதற்கு ஓசிஎல், அதன் நிா்வாக இயக்குநா் மற்றும் பலா் விளக்கம் அளிக்க வலியுறுத்தி நோட்டீஸ் அனுப்பப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.