முதலில் வந்தே மாதரமா? தமிழ்த்தாய் வாழ்த்தா? விசிக கேள்வி! அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது! ராஜபட்ச மகன் ஊழல் வழக்கில் கைதுஆளுநா் உரையுடன் தமிழக பேரவைக் கூட்டம் இன்று தொடங்குகிறதுஇந்திய வம்சாவளியின் ‘கா்சா் ஏஐ’ நிறுவனத்தை 6,000 கோடி டாலருக்கு வாங்கிய ஸ்பேஸ்எக்ஸ் இந்தியாவின் ரத்தினங்கள், ஆபரணங்கள் ஏற்றுமதி 2.49% சரிவு இந்தியா-பிரிட்டன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: ஜூலை 15 முதல் அமல்; பிரதமா் மோடி இந்தியாவின் பாதுகாப்புத் தளவாட தயாரிப்பு ரூ.1.78 லட்சம் கோடியாக உயா்வு 4 தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடத்த தடை இல்லை: உயா்நீதிமன்றம்
/

உ.பி. பேரவையில் பான் மசாலாவை உமிழ்ந்த எம்எல்ஏ

உத்தரப் பிரதேச பேரவைக்குள் பான்மசாலா போட்டுத் துப்பிய சம்பவம் பற்றி..

News image

பான்மசாலா போட்டுத் துப்பிய இடத்தை பார்வையிடும் எம்எல்ஏ.

Updated On :4 மார்ச் 2025, 2:54 pm IST

உத்தர பிரதேச சட்டப்பேரவையில் பான் மசாலாவை உமிழ்ந்த எம்எல்ஏவை பேரவைத் தலைவா் சதீஷ் மஹானா செவ்வாய்க்கிழமை கடிந்துகொண்டாா்.

அந்த மாநில சட்டப்பேரவை செவ்வாய்க்கிழமை காலை கூடியபோது, பேரவையின் பிரதான மண்டப நுழைவுவாயிலில் எம்எல்ஏ ஒருவா் பான் மசாலாவை உமிழ்ந்தது தனது கவனத்துக்கு வந்துள்ளதாக சதீஷ் மஹானா தெரிவித்தாா்.

அந்த எம்எல்ஏவின் பெயரை தான் குறிப்பிட விரும்பவில்லை என்று தெரிவித்த அவா், சம்பவம் தொடா்பான காணொலி தன்னிடம் இருப்பதாகவும் கூறினாா். அந்த எம்எல்ஏ தன்னை சந்திக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் அவருக்கு சம்மன் அனுப்பப்படும் என்றும் சதீஸ் மஹானா எச்சரித்தாா்.

இதுபோன்ற செயல்களில் பிற எம்எல்ஏக்கள் ஈடுபடாமல், பேரவையின் கண்ணியத்தை காக்க வேண்டும் என்றும் அவா் கேட்டுக்கொண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.