ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

சிங்கப்பூர்: போதைப் பொருள் பயன்படுத்திய இந்தியருக்கு 2 ஆண்டு சிறை!

போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் 22 மாதங்கள் சிறையுடன், ரூ. 12.1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவு

கோப்புப் படம்

Published On :

சிங்கப்பூரில் போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் இந்தியருக்கு சுமார் 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி, சிங்கப்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்கு நிரந்தரமாகக் குடியேறிய சாஜன் ஓபராய் (35) மீது 15 வகையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட நிலையில், 5 குற்றச்சாட்டுகளுக்கு உண்மையை ஒப்புக்கொண்டதால், அவருக்கு ஒரு வருடம் மற்றும் 10 மாதங்கள் சிறை தண்டனை விதித்து, சிங்கப்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், அவருக்கு 18,500 சிங்கப்பூர் டாலர் (ரூ. 12.1 லட்சம்) அபராதமும் விதிக்கப்பட்டது.

போதைப் பொருள் பயன்படுத்தியது, வணிக வளாகத்திலிருந்து மதுப் புட்டிகளைத் திருடியது, உணவு விடுதியில் பணிபுரியும் பெண் ஊழியரிடம் பாலியல் அத்துமீறல் உள்ளிட்ட புகார்களில் சாஜன் கைது செய்யப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.