மோரீஷஸ் குடியரசுத் தலைவர் தரம்பீர் கோகூல் மற்றும் அவரின் மனைவி பிருந்தா கோகூல் ஆகியோருக்கு கும்பமேளா திரிவேணி சங்கமத்தின் நீரை பிரதமர் நரேந்திர மோடி பரிசளித்தார்.
மேலும், இந்திய வெளிநாட்டுக் குடியுரிமைக்கான அட்டையையும் நினைவுப் பரிசாக வழங்கினார். இதோடு மட்டுமின்றி பிகார் மக்கள் விரும்பி உண்ணும் மக்கானாவையும், பனாரஸ் புடவையையும் பரிசாக வழங்கினார்.

இந்திய வெளிநாட்டுக் குடியுரிமைக்கான அட்டையை பரிசளிக்கும் பிரதமர் - PTI
இது குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மோரீஷஸ் சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு குடியரசுத் தலைவர் தரம்பீர் கோகூல் உடனான சந்திப்பின்போது இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு ஒப்பந்தங்கள் மற்றும் ஆழ்ந்த பார்வைகள் குறித்த கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர். இரு நாடுகளுக்கு இடையே வரலாற்று ரீதியாக உள்ள தொடர்பு மற்றும் மக்கள் பிணைப்பு குறித்து விவாதித்தனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளதாவது,
''தரம்பீர் கோகூலுடனான சந்திப்பு சிறப்பாக அமைந்தது. இந்தியா குறித்தும் அதன் கலாசாரம் குறித்தும் அவர் நன்கு அறிந்திருந்தார். மோரீஷஸ் தேசிய நாள் கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க அழைப்பு விடுத்ததை பெருமையாகக் கருதுகிறேன்.
பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒப்பந்தங்களை மேலும் மேம்படுத்துவது இருவரும் ஆலோசனை மேற்கொண்டோம்'' எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க | மோரீஷஸ் வரை பிரபலமடைந்த ஆயுர்வேதம்: பிரதமர் மோடி
Had a great meeting with His Excellency Mr. Dharambeer Gokhool, President of Mauritius. He is well acquainted with India and Indian culture. Expressed gratitude for inviting me to be a part of the National Day celebrations of Mauritius. We discussed how to further boost bilateral⦠pic.twitter.com/eTG8yEdxoK
— Narendra Modi (@narendramodi) March 11, 2025
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









