ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

பஞ்சாயத்து அலுவலரிடம் மராத்தியில் பேசுமாறு சண்டையிட்ட நபர் கைது!

கர்நாடகத்தில் அரசு ஊழியரை மராத்தியில் பேசுமாறு தகாத வார்த்தைகளால் திட்டிய நபர் கைது.

News image
கைது 
Updated On :12 மார்ச் 2025, 4:15 pm

DIN

கர்நாடக அரசு ஊழியரை மராத்தியில் பேசுமாறு தகாத வார்த்தைகளால் திட்டிய நபரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

கர்நாடகத்தின் பெலகாவி மாவட்டத்தில் திப்பன்னா சுபாஷ் டோக்ரே என்பவர் சொத்து தொடர்பான பிரச்சினைக்காக கிராம பஞ்சாயத்து அலுவலகத்திற்கு நேற்று சென்றுள்ளார்.

அங்கு பணியிலிருந்த பஞ்சாயத்து மேம்பாட்டு அலுவலர் நாகேந்திர பட்டர் என்பவரிடம் கன்னடத்திற்குப் பதிலாக மராத்தியில் தனது சொத்து தொடர்பான ஆவணங்களைத் தருமாறு கூறியதுடன் அவரை மராத்தியில் பேசுமாறு திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அரசு அலுவலரை அவர் திட்டும் விடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனைத் தொடர்ந்து, பெலகாவி கிராமப்புற காவல் நிலைய அதிகாரிகள் அந்த நபரை இன்று கைது செய்தனர்.

அதிகாரியை அவர் திட்டிய வீடியோ வைரலாக பரவி வருகிறது, அதைத் தொடர்ந்து பெலகாவி கிராமப்புற காவல் நிலைய அதிகாரிகள், அதிகாரியை திட்டியதாகக் கூறி குற்றம் சாட்டப்பட்டவரைக் கைது செய்தனர்.

இதுதொடர்பாக காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் பேசுகையில், "அரசு அதிகாரிகளுக்கு எதிரான இதுபோன்ற சம்பவங்களை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. சம்பந்தப்பட்ட நபர் மீது அரசு ஊழியரைத் தனது கடமையைச் செய்யவிடாமல் தடுத்ததற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது" என்றார்,

பெலகாவி பகுதியில் கடந்த மாதம் பயணி ஒருவரிடம் மராத்தியில் பதிலளிக்காததால் அரசுப் பேருந்தின் நடத்துனரைத் தாக்கியதற்காக நான்கு பேர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.