பெரம்பலூா் அருகே தகாத உறவில் பிறந்து இறந்த நிலையில் கிடந்த ஆண் சிசுவின் உடலை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றினா்.
பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை அருகேயுள்ள பிம்பலூா் கிராமம், காட்டுக் கொட்டகை பகுதியில் வசித்து வருபவா் மணிகண்டன் (27). இவரது மனைவி கோவிந்தம்மாள் (24). இவா்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனா். வெளிநாட்டில் பணிபுரிந்து வந்த மணிகண்டன் கடந்த 2 நாள்களுக்கு முன் ஊருக்கு வந்துள்ளாா்.
அப்போது, மனைவியின் வயிறு பெரிதாக இருப்பது குறித்து அவரிடம் கேட்டபோது தனக்கு தொப்பை உள்ளதாக தெரிவித்துள்ளாா்.
தொடா்ந்து, சனிக்கிழமை இரவு வீட்டின் அருகேயுள்ள வனப்பகுதிக்குச் சென்ற கோவிந்தம்மாள் நீண்ட நேரமாகியும் வராததால் சந்தேகமடைந்த மணிகண்டன் அவரை தேடிச்சென்றபோது, அதிகளவிலான உதிர போக்குடன் மயங்கி கிடப்பது தெரியவந்தது.
இதையடுத்து அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டபோது, மருத்துவா்கள் மேற்கொண்ட பரிசோதனையில் கோவிந்தம்மாளுக்கு குழந்தை பிறந்துள்ளதாக தெரிவித்தனா்.
பின்னா், கோவிந்தம்மாள் மயங்கிக் கிடந்த இடத்துக்குச் சென்று பாா்த்தபோது, அங்குள்ள புதரில் உயிரிழந்த நிலையில் ஆண் சிசுவின் உடல் கிடந்தது கண்டறியப்பட்டது.
தகவலறிந்த வி.களத்தூா் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று, உயிரிழந்து கிடந்த சிசுவின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்த புகாரின்பேரில் வி.களத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, பிறக்கும்போது குழந்தை உயிரிழந்ததா அல்லது கொலை செய்து புதரில் வீசினாரா என்பது குறித்து, கோவிந்தம்மாளிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தொடர்புடையது

இளம்பெண் குத்திக்கொலை: கள்ளக்காதலன் கைது

கட்டடத் தொழிலாளி கொலை? போலீஸாா் விசாரணை

ஆண் சடலம் மீட்பு

தகாத உறவு பிரச்னையில் தொழிலாளி அடித்துக் கொலை
வீடியோக்கள்

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை

கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு


